வீடே மணக்கும் சாம்பார்
துவரம் பருப்பு வேக வைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு சிறிதளவு தட்டிப் போட்டால் . பருப்பும் வேகமாக வெந்து விடும். சாம்பாரின் ருசியும் அலாதியாக இருக்கும். வீடே மணக்கும்.
முருங்கைக்கீரையில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான வீடுகளில், முருங்கைக்கீரையில் உள்ள காம்பை எடுத்து சமைப்பதும் போதும், என ஆகிவிடும் என்று இதை சமைக்கமாட்டார்ககள் ஆனால் அது அவ்வளவு கஷ்டம் இல்லங்க நீங்கள் முருங்கை கீரையில் உள்ள பெரிய காம்புகளை மட்டும் நீக்கி விட்டு எடுத்து கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அந்த கீரை முழுகும் வரை தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அசி கொள்ளுங்கள்.இதை 5 நிமிடம் அந்த தண்ணீரிலே வைத்து விட்டு, பிறகு அதில் உள்ள கீரையில் உள்ள காம்பு அடியில் தங்க ,கீரையை எடுத்து சமைக்கலாம்.
சமையலறையில் குப்பைதொட்டியை வைக்கக் கூடாது.அந்தந்த நேரத்தில் சேகரிக்கும்சமையல் கழிவுகளைஉடனுக்குடன் அப்புறப்படுத்தி விட வேண்டும். சிலர் நாள் முழுக்க குப்பை தொட்டியில் கழிவுகளை போட்டுக் கொண்டே வருவார்கள். அதை மறுநாள் தான் குப்பைக்கு கொண்டு செல்வார்கள். இது போல ஒரு நாள் முழுவதும் சேகரிக்கும் குப்பை கழிவுகள் சமையல் அறையில் இருந்தால் அங்கு அன்னபூரணியின் வாசம் குறையும். இதனால் வறுமை உண்டாகும்.
0
Leave a Reply