மாவு சலிக்கும் சல்லடை பொத்துப் போய் விட்டால்
வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ போன்றவற்றை கூட்டு செய்யும் போது தேங்காய் எண்ணெயில் தாளித்தாள் அதிக ருசியாக இருக்கும்.
மாவு சலிக்கும் சல்லடை பொத்துப் போய் விட்டால் அந்த இடத்தில் உட்புறமாக சற்று பெரிய சைஸ் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி விட்டால் சல்லடையை இன்னும் கொஞ்சகாலம் பயன்படுத்தலாம்.
ஆழாக்கு அரிசியையும் படி ஆழாக்கு சோற்றையும் அரைத்துக் கொண்டால் திடீர் தோசை செய்யலாம்.
மசாலாவை கொதிக்கும் நீரில் போட்டுவிட்டு பின் நூடுல்ஸை போட வேண்டும்.
சப்பாத்தி, பூரி மீதமாகி விட்டால் தோல் சீவிய ஒருஉருளைக்கிழங்கைப் போட்டு ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட்டால் அப்படியே இருக்கும்.
துவரம் பருப்பை ஊறவைத்து அதனுடன் மிளகாய்வற்றல், தனியா அரைத்து காய்கறியில்லாத சாம்பார் செய்யலாம்.
ரசத்தை இறக்கும் முன்பு ஒரு ஸ்பூன் கருவேப்பிலைப் பொடிதூவி இறக்கினால் மணமாக இருக்கும்.
முருங்கை இலையை உருவிய பின்னர் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைக்கலாம். இது உடல், கை, கால் அசதிக்கு மிகவும் நல்லது.
0
Leave a Reply