எலுமிச்சம்பழம் சர்பத் தயாரிக்கும் போது சிறிதளவு இஞ்சிச் சாறைக் கலந்தால்....
முருங்கைக்காய் நீண்ட நாள் வாடாமல் இருக்க, சாம்பாரில் சேர்க்கும் அளவு துண்டுகளாக நறுக்கி கற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன் நன்றாக கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்புன் சர்க்கரை மற்றும் பழங்களை போட்டு மூடி வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து நறுக்கி, ஊறுகாய் போட்டால் மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு தன்மை இருக்காது.பால் பொங்கி கீழே வடியாமல் இருக்க, பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக்கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வராது.
எலுமிச்சம் பழத்தை வாங்கி அதனை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு விணாகாமல் பாதுகாக்கலாம்.
சாம்பார் செய்யும்போது புளிப்பு சுவை அதிகமாகிவிட்டால் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கொதிக்க வைக்கவும். அவ்வளவு தான் சாம்பாரில் உள்ள புளிப்பு சுவை இப்போது! குறைந்து சாம்பார் டேஸ்ட்-ஆக இருக்கும்.
எலுமிச்சம்பழம் சர்பத் தயாரிக்கும் போது சிறிதளவு இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
0
Leave a Reply