25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையம் நகராட்சியில் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடு சேதம் அடைந்ததால் பாதிப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் நகராட்சியில் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடு சேதம் அடைந்ததால் பாதிப்பு

இராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து ரோடுகளும் முழு அளவில் தோண்டப்பட்டு 80 சதவீதம் புதிய ரோடு அமைக்கப்பட்டு விட்டது. ரோடு பணிகளின் போது வாறுகால், பக்கவாட்ட கவரை உயர்த்தாமல் ரோடு அமைத்துள்ளனர். இதனால் வாறுகாலை விட ரோடு உயர்ந்து முழுமை அடையாமல் சாலைகள் பக்கவாட்டில் சரிந்தும் பல இடங்களில் சேதம் அடைந்தும் உள்ளது. இதனால் குறுகலான தெருக்கலில் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இராஜபாளையம் நகராட்சி 16 வது வார்டில் கூரைபிள்ளையார் கோவில் தெரு, பெத்தையா தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட சந்துகள் அடங்கியுள்ளது. தூய்மைபணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பை பெறுவதில் கடுமை காட்டுவதாகவும், கழிவுநீர் தேக்கத்தை அகற்றுவதில் மெத்தனம் உள்ளதாக கூறுகின்றனர். திருவள்ளுவர் தெரு தொடக்கத்தில் பேவர் பிளாக் ரோடு சிதைந்தும், தெருவின் நடுவே வாறுகால் தலைப்பாலம் உடைந்தும் விபத்து ஏற்படுத்துகிறது.பெத்தையா தெரு, திருவள்ளுவர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு பகுதி சந்துகளில் மேம்பாட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு புதிய ரோடு போடப்படவில்லை. குடியிருப்பு இடையே குவிக்கப்படும் குப்பை முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி சரி செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News