25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் சார்பாக இண்ட்ராக்ட் கிளப் ஆஃப்  ஆனந்தா வித்யாலயாவின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்கும்  நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் சார்பாக இண்ட்ராக்ட் கிளப் ஆஃப்  ஆனந்தா வித்யாலயாவின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்கும்  நிகழ்ச்சி

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் இராஜபாளையம் கிங்ஸ் சிட்டியின் சார்பாக இண்ட்ராக்ட் கிளப் ஆஃப்  ஆனந்தா வித்யாலயாவின் புதிய தலைவர் மற்றும் செயலாளர் பதவி ஏற்கும்  நிகழ்ச்சி பள்ளித் தாளாளர் ஸ்ரீமதி. ஆனந்தி அவர்கள் முன்னிலையில்  சிறப்பாக  நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினராக Rtn.ராமனாதன் அவர்கள் கலந்து கொண்டார். Rtn. குமார் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்க, பள்ளி முதல்வர் புதிதாக பொறுப்பு ஏற்கவிருக்கும் மாணவர்களை அறிமுகம் செய்தார். பள்ளித் தாளாளர் விருந்தினர் களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் இண்ட்ராக்ட் கிளப் தலைவராக மாணவர் T.தவச்செல்வன் மற்றும் செயலாளராக மாணவி J.பிரிட்டீனா பிளஸ்சி பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஒருங்கிணைப்பாளர் Rtn. வெங்கடபெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். Rtn. ராமனாதன் அவர்கள் தமது உரையில், மாணவர்கள் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நம்பிக்கைக்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டு களுடன் விளக்கினார். மேலும் மாணவர்கள் Passion, Practice, Patience மற்றும் Persistance  போன்ற குணநலன்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர்,  மற்றும் Rtn. Dr.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்க ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் திரு. காளிதாஸ் நன்றியுரை கூற  தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. விழாவில் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News