25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


'வடக்கன்' என்ற படத்தின் மூலம்  பெண் இசை அமைப்பாளராக ஜனனி அறிமுகமாகிறார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'வடக்கன்' என்ற படத்தின் மூலம் பெண் இசை அமைப்பாளராக ஜனனி அறிமுகமாகிறார்

தமிழ் சினிமாவில் பெண் இசை அமைப்பாளர்கள் மிகவும் குறைவு ஒரு சிலர் வருகிறார்கள். ஓரிரு படங்களுடன் ஒதுங்கி விடுகிறார்கள். இளையராஜாவின் மகள் பவதாரிணி. ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ரெஹானா உள்ளிட்ட ஒரு சிலர் அவ்வப்போது படங்களுக்கு இசையமைக்கிறார்கள் இந்த நிலையில் 'வடக்கன்' என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக ஜனனி அறிமுகமாகிறார்.இவர் கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவர் இந்துஸ்தானி, வெஸ்டர்ன். கிளாசிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவர் தனிப் பாடல்கள் மற்றும் இசை ஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றவர் இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராகிறார் படத்தில் பிரதானமாக இடம் பெறும் முக்கியமானதொரு பாடலை ரமேஷ் வைதியா எழுத. தேவா பாடினார் பாடலைப் பாடி முடித்ததும் ஜனனியை தேவா பாராட்டி ஆசி வழங்கினார்.

எம்டன் மகன் வெண்ணிலா கபடிக்குழு. நான் மகான் அல்ல. அழகர்சாமியின் குதிரை பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனத்தை எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் படம் வடக்கன்' தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும் பாரதிராஜா கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெரு நகரம் துவங்கி குக்கிராமங்கள் வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நிகழும் ஒரு உணர்வு மயமான நகைச்சுவை கலந்த பொழுது போக்குத் திரைப்படமாக வடக்கன் உருவாகியுள்ளது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News