25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


மல்லிகைப்பூ செடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மல்லிகைப்பூ செடி

மதுரை மல்லிகையின் மனமும், நிறமும், தமிழகத்தில் வேறு எங்கும் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களில் கண்டறிய முடியாது. அதனால், உள்ளூர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை மதுரை மல்லிகைக்கு நிரந்தரமாக வரவேற்பு உண்டு.பொதுவாக மல்லிகை உற்பத்தி சீசன், பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும். இந்த சீசனில் மல்லிகைப்பூக்கள் அதிகளவு சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும்.இந்நிலையில் தற்போது குளிர் காலம் தொடங்கும் ஆஃப் சீசனில் மல்லிகை சாகுபடியில் பெரியளவில் பூக்கள் உற்பத்தியாகாது. ஆனால், உற்பத்தி குறைவால் இந்த ஆஃப் சீசனில் பூக்களுக்கு நல்ல மவுசும், விலையும் கிடைக்கும்.

குளிர்காலத்தில் மல்லிகைப்பூ செடிகளை கவாத்து செய்து ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குளிர்காலங்களில் கூட மல்லிகைப்பூ உற்பத்தியை அதிகரிக்கலாம்.குளிர்காலங்களில் மல்லிகை பூ விலையானது மும்மடங்கு அதிகரிப்பதால் விவசாயிகள் அதிகம் லாபம் ஈட்டலாம். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தரையிலிருந்து45 செ.மீ., உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும்.கவாத்து செய்த வெட்டுப்பகுதிகளில் பைட்டலான் பூஞ்சாணக் கொல்லியை தடவி பூஞ்சாணத்தாக்குதலை கட்டுப்படுத்தலாம். கவாத்து செய்யும்போது குறுக்குக்கிளைகள், நோய் மற்றும் பூச்சி தாக்கிய கிளைகள், மெலிந்த சிறிய கிளைகள் ஆகிவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

செடிகளை நன்கு சூரிய ஒளி படுமாறு செய்ய வேண்டும். கவாத்து செய்தவுடன் தொழுஉரம் 10 கிலோவுடன்30;60;60 கிராம் தழை, மணி, சாம்பல்சத்து அதாவது, 65 கிராம், யூரியா 375 கிராம், பொட்டாஷ் 100 கிராம் என்ற அளவில் ஒவ்வொரு செடிகளுக்கும் அதன் மையப்பகுதிகளில் இருந்து 1 1/2 அடி அளவிற்கு தள்ளி 1/2 அடி ஆழம் குழி பறித்து மண்ணில் இட்டு உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.ஒவ்வொரு செடிக்கு500 கிராம் வேப்பம் பிண்ணாக்கு இடுவதின் மூலம் நூற்புழுக்கள் தாக்கா வண்ணம் செய்யலாம். கவாத்து செய்து ஒரு மாதம் கழித்து10 மில்லி சைகோசெல் மற்றும்4 மி.லி ஹூமிக் அமிலத்தை10 லிட்டர் தண்ணிரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இதை செய்தால் நவம்பர், டிசம்பரில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News