வயிற்றை சுத்தமாக வைத்து, கழிவுகள் நல்லமுறையில் வெளியேற....
நாம்உண்ணும் உணவுகள்செரிமானமாகி சத்துக்கள்உறிஞ்சப்பட்ட பின்,கழிவுகள் நல்லமுறையில் வெளியேறும்வரை உண்டானசெயல்களில் சம்பந்தப்பட்டிருக்கும் இரைப்பை,சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல்போன்ற பல்வேறுஉறுப்புகளின் தொகுப்பையேநாம் ஜீரணமண்டலம் என்றுகூறுகிறோம். ஜீரணமண்டலத்தின் செயல்பாடுகள்சிறப்பாக அமையநாம் அதன்உறுப்புகளை சுத்தமாகவும்ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதுஅவசியம். அதற்கானஐந்து வழிமுறைகளை இந்தப்பதிவில் பார்ப்போம்.ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு உண்பது மற்றும் வாரத்தில் ஒன்றிரண்டு முறைஉண்ணா நோன்பை கடைப்பிடிப்பது உள்ளிட்ட சுழற்சி முறையைப் பின்பற்றுவது நலம் தரும். உணவைத் தவிர்த்து நோன்பிருக்கும் நேரங்களில் ஜீரண மண்டலம் ஓய்வெடுக்கவும், உள்ளிருக்கும் சிறு சிறு சிதைவு போன்ற கோளாறுகளை நிவர்த்தி செய்யவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
பல வகை உணவு வகைகளை சேர்த்து உட்கொள்ளும்போது செரிமானக் கோளாறு ஏதுமின்றி ஜீரணம் சிறப்பாக நடைபெறும்; ஊட்டச் சத்துக்களும் நல்ல முறையில் உடலுக்குள் உறிஞ்சப்படும்.உணவுகளை வாயில் இட்டதுமே அப்படியே விழுங்கி விடாமல், பற்களின் உதவியால் உணவை நன்கு மெல்ல வேண்டும். அப்போது உமிழ் நீர் அதிகளவு சுரக்க ஆரம்பிக்கும். அதிலுள்ள என்சைம்களுடன் உடைக்கப்பட்ட உணவுகள் கலந்து செரிமான செயல்பாடு வாயிலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது.பித்த நீர் மற்றும் வயிற்றில் சுரக்கும் ஒரு வகை அமிலம் ஆகியவை உணவுகளை உடைக்கவும், ஜீரணம் நல்ல முறையில் நடைபெறவும் உதவுபவை. இதுபோன்ற திரவங்களின் உற்பத்தியை கசப்பு சுவை கொண்ட உணவுகள் அதிகரிக்கச் செய்கின்றன. ஆகையால், பாகற்காய், காலே போன்ற காய்களையும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது ஜீரண மண்டலம் நன்கு செயல்பட உதவியாக இருக்கும்.வயிற்றை சுற்றி நன்கு கைளால் மசாஜ் செய்வது நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கக்கூடியது. இப்படி மசாஜ் செய்வதால் வயிற்றிலுள்ள வாயு வெளியேறும்; வீக்கம் குறையும்; செரிமானப் பாதையில் உள்ள தடங்கல்கள் நீங்கி, குடல் இயக்கம் ஒழுங்காக நடைபெறும்.
0
Leave a Reply