25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மாதவனின் ராக்கெட்ரி தேசிய விருது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாதவனின் ராக்கெட்ரி தேசிய விருது

69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே சிறந்த படமாக மாதவனின் ராக்கெட்ரி: நம்பி விளைவு (இந்தி) படத்துக்கு சிறந்த படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த விருது விழா முடிந்தவுடனே பத்திரிகையாளர் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கிய நிலையில், ராக்கெட்ரி படத்துக்கு என்ன காரணத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.

இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டோம். ஆனால், நீங்கள் கேட்டதற்காக பதில் அளிக்கிறேன் எனக்கூறிய கேத்தன் மேத்தா 4 - C தான் காரணம் என விளக்கி உள்ளார்.இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட்டுக்கான இன்ஜினை கண்டுபிடித்த நிலையில், அவருக்கு பாராட்டுக்கள் கிடைப்பதற்கு பதிலாக தேசதுரோகி என்கிற பட்டம் கிடைத்து பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். மேலும், தன்னை நிரபராதி என நிரூபிக்க நீதி போராட்டத்தையும் நடத்தி வென்றார்.அவரது வாழ்க்கை வரலாற்று கதையை படமாக இயக்கி அதில் நம்பி நாராயணனாகவே நடிகர் மாதவன் வாழ்ந்திருந்தார். இந்தியில் ஷாருக்கான் கேமியோ ரோலிலும், தமிழில் சூர்யா கேமியோ ரோலிலும் நடித்திருந்தனர். நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.சிறந்த படம் ராக்கெட்ரி: 69வது தேசிய விருதுகள் ஆகஸ்ட் 28ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது ராக்கெட்ரி படத்துக்கு அறிவிக்கப்பட்டது. அந்த படத்தை இயக்கி, நடித்த மாதவனுக்கு தேசிய விருது வழங்கப்படும் என அறிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News