25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உடல் எடையை குறைக்க உதவும் மக்கானா கீர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் எடையை குறைக்க உதவும் மக்கானா கீர்

பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நம்மில் பலரும் இது போன்ற இனிப்பு வகைகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்று பயப்படுவார்கள்.  வீட்டில் சமைத்து சாப்பிடும் இனிப்பு வகைகளில் ஆரோக்கியம் அதிகம் நிறைந்துள்ளது. இந்த வரிசையில் உடல் எடையை குறைக்க உதவும் தாமரை விதைகள் என்று கூறப்படும் மக்கானாவை வைத்து சுவையான ஆரோக்கியம் நிறைந்த மக்கானா கீர் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்:

2 கப் மக்கானா, 1 லிட்டர் காய்ச்சிய பால்,1/4 கப் சர்க்கரை,  1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பாதாம், டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி,1 டேபிள் ஸ்பூன் திராட்சை, ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்,  2 டேபிள் ஸ்பூன் நெய்.

 செய்வது எப்படி?

முதலில் அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து ,ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி கொள்ள வேண்டும். நெய் சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும். முந்திரி மற்றும் பாதாம் சிறிது பொன்னிறமானதும் இதில் 1 டேபிள் ஸ்பூன் திராட்சையை சேர்த்து கிளறி விட வேண்டும். இதற்க்கு பிறகு கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில்2 கப் மக்கானாவை குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாம் வறுத்து வைத்துள்ள மக்கானா ஒன்றரை கப் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாய் வைத்து மீதமுள்ள மக்கானாவை பால் ஊற்றி குறைந்தது ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மக்கானாவை சேர்த்து நன்கு கிளறி விடவும். இதற்கு பிறகு சீரான பதத்திற்கு வந்தவுடன் நாம் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும். இதற்கு பிறகு தேவையான அளவு சர்க்கரை மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து சுமார் மூன்று நிமிடங்கள் சமைத்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான மக்கானா கீர் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News