மணி ரத்னம் சாதித்து விட்டார் என ரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்மணி ரத்னம் இயக்கிய“பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என வெளிவர உள்ளது. அதில் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி வெளிவருகிறது“பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்குவதற்கு எம் ஜி ஆர் காலத்தில் இருந்தே பலரும் முயன்று தோற்றும் வந்திருக்கின்றனர்.தஞ்சை பெரிய கோவிலை கட்டியபோது ராஜ ராஜ சோழனிடம் நெருக்கமாக இருந்த கருவூர் சித்தர், அவரது திட்டத்திற்கு மாறாக மன்னர் கோயிலை கட்டியதாகவும் ஆதலால் அந்த கோயில் மேல் அவர் சாபம் விட்டதாகவும் ஒரு பழங்கதை இன்று வரை பரவி வருகிறது. இந்திரா காந்தியே ஒரு முறை தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று வந்த போது அதற்கு அடுத்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அதே போல் கலைஞர் கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலில் விழா எடுத்த பிறகு அவர் அதன் பின் ஆட்சிக்கே வரவில்லை. இது போன்ற சம்பவங்களால் இந்த கதை மிகவும் பலமாக பரவ ஆரம்பித்தது. இதற்கு காரணமாக ராஜ ராஜ சோழன் மேல் உள்ள சாபம் தான் காரணம் என பல கதைகள் உலாவி வந்தன.
ராஜ ராஜ சோழன் சம்பந்தமாக எதை தொட்டாலும் அது தோல்வியிலேயே முடியும் என ஒருபழங்கதை பரவியது. இந்த நிலையில் தான் கடந்த2008 ஆம் ஆண்டு மணி ரத்னம்“பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்குவதற்கான பணிகளை தொடங்கினார். ஆனால் அந்த பணி தொடராமல் போனது. மணி ரத்னம் மீண்டும்“பொன்னியின் செல்வன்” பணிகளை தொடங்கினார். ஆனால் அதன் பின் அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டதாக செய்திகள் வந்தது.இதனை தொடர்ந்து கடந்த2019 ஆம் ஆண்டு ஆண்டு ஒரு வழியாக“பொன்னியின் செல்வன்” பணிகள் தொடங்கியது. ஆனால் அதன் பின் கொரோனா தொற்று பரவி படப்பிடிப்பு பணிகள் முடங்கியது.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டப் பின், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி தற்போது திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தில் பணியாற்றிய வசன கர்த்தா ஜெயமோகன்“படப்பிடிப்பின் போது தனக்கு எதாவது நேர்ந்துவிட்டால் யார் இந்த பணியை தொடர வேண்டும் என முடிவு செய்து தான் படப்பிடிப்பையே தொடங்கினார் மணி ரத்னம். ஒரு போர் வீரன் போருக்கு போவது போல் தான் இத்திரைப்படத்தை இயக்கினார். கிட்டதட்ட சாவை நோக்கி, போய்க்கொண்டிருப்பது போல் எல்லாத்துக்கும் தயாராக இருந்தார்” என கூறினார்.எனினும் யாரும் இதுவரை சாதிக்காத செயலை தற்போது மணி ரத்னம் சாதித்து விட்டார் என ரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.
0
Leave a Reply