25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திரு.K.K.தேசிங்குராஜா  அவர்களின் துணைவியார் அமரர் K.D. ஸ்ரீரங்கம்மாள்அவர்களின் நினைவாக மகளிர் வாக்கத்தான் (நடைபயணம்)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திரு.K.K.தேசிங்குராஜா அவர்களின் துணைவியார் அமரர் K.D. ஸ்ரீரங்கம்மாள்அவர்களின் நினைவாக மகளிர் வாக்கத்தான் (நடைபயணம்)

யுகாதி திருநாளை முன்னிட்டு 07.04.2024 அன்று ராஜபாளையம் திருவனந்தபுரம் கோட்டையில் நடைபெற்ற முன்னாள் மகாசபை தலைவர்திரு.K.K.தேசிங்குராஜா

அவர்களின் துணைவியார் அமரர் K.D. ஸ்ரீரங்கம்மாள்அவர்களின் நினைவாக மகளிர் வாக்கத்தான் (நடைபயணம்) இராஜை நகரில்  முதல் முறையாக மிக விமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் 306 மகளிர் பங்கேற்று ஐந்து மற்றும் மூன்று கிலோ மீட்டர் நடைபயணம் செய்தார்கள் இவ்விழாவை Dr.லஷ்மிநிவேதிதா மற்றும் Dr.A.B. சித்ரா அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.இந்த அற்புதமான நிகழ்வை K.D. சக்திவேல் ராஜா, சான்ஸ்ரீ லெதர்ஸின் உரிமையாளர், தனது தாயாரின் நினைவாக, தனது தந்தை சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் இனிதே நடத்தினார்.

P.R.விஜய்குமார் அறக்கட்டளையின் அறங்காவலர்  P.M.ராமராஜ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தொப்பிகளை வழங்கி ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த திருவனந்தபுரம் கோட்டை சத்ரிய ராஜுக்கள் மகாசபை தலைவர் திரு.S.A.ஜெகநாதராஜா, K.K.தேசிங்குராஜா, குடும்பத்தார்கள், மகாசபை உறுப்பினர்கள், மகளிர் அணி, இளைஞர்கள் அனைவருக்கும்  K.D. சக்திவேல்ராஜா நன்றி கூறினார்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News