25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கோடை காலத்தில் இந்த வெயிலில் இருந்து தப்பிக்க வேப்பம்பூ சர்பத் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை காலத்தில் இந்த வெயிலில் இருந்து தப்பிக்க வேப்பம்பூ சர்பத் 

 வேப்பம் பூக்கள்.சித்திரை மாதத்தில் எங்கெங்கு பார்த்தாலும் பூத்துக்குலுங்குகிறது. இதில் பல வகை உணவுகள் செய்ய முடியும். சட்னி, ரசம், கிரேவி என வெயிலுக்கு இதமான பல்வேறு உணவுகளும் செய்யலாம். உங்களுக்கு இந்த வெயிலை சமாளிப்பதற்கு வேப்பம்பூ ரசம் மிகவும் உதவியாக இருக்கும்.குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக வேப்பம்பூ சர்பத் அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

 வேப்பம்பூக்கள், இயற்கையாகவே ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டவை. அது உங்கள் உடலை ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்யும். இந்தப்பூக்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பூத்துக்குலுங்கும். இதை உட்கொள்வதும் பாதுகாப்பானது.இது கிடைக்காத காலங்களில் இதை பொடியாக மற்றும் உலர்த்தி பயன்படுத்தப்படுகிறது. இதை பறித்தவுடன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வேப்பம் பூக்கள் ஏப்ரல், மே, ஜீன் மாதங்களில் கிடைக்கும் ஒன்று. உங்கள் உணவில் இதை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

வேப்பம்பூ சர்பத் செய்ய தேவையான பொருட்கள்

வேப்பம் பூக்கள் – 2 ஸ்பூன், வெல்லம் – 2 ஸ்பூன் (பொடித்தது) தண்ணீர் – 2 கப்

மிளகுத்தூள் – 2 சிட்டிகை, இஞ்சி – ஒரு ஸ்பூன் இடித்தது, உப்பு – தேவையான அளவு, மாங்காய் – கொஞ்சம் துருவியது

செய்முறை

தண்ணீரில் வெல்லத்தை கரைத்து, அதில் வேப்பம்பூக்களை சேர்க்க வேண்டும். உப்பு, மிளகுத்தூள், துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து பருகினால் அது உங்களுக்கு சிறந்த கோடை பானமாக இருக்கும்.

 வேம்பின் நற்குணங்கள் அனைத்தும் நமக்கு நன்றாக தெரிந்தவைதான். வேப்பம்பூக்களும் அதே அளவு நன்மைகளை உடலுக்கு கொடுக்கின்றன. இது நமது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை கொடுக்கிறது.

 குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், செரிமான கோளாறு, வயிற்று வலி போன வயிறு உபாதைகளை போக்குகிறது. இது பித்தம் உருவாவதை குறைக்கிறது. சளியை கட்டுப்படுத்துகிறது மற்றும் குடலில் உருவாகும் புழுக்களை அழிக்கிறது.

 நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க வேப்பம்பூக்கள் உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும் செய்கிறது.

வேப்பம்பூக்களின் நன்மைகள் உடலுக்கு உறுதியளிப்பதுடன் நிற்கவில்லை. முகப்பருக்களை நீக்குகிறது. கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது. சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News