25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கொட்டை பாக்கு  பலன்கள்,. கெடுதல்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கொட்டை பாக்கு பலன்கள்,. கெடுதல்கள்

உணவு சாப்பிட்டதுமே, வெற்றிலை போடும் பழக்கம் இன்றளவும் நம்முடைய தமிழகத்தில் உள்ளது.. காரணம்,செரிமானத்தை சீராக்கக்கூடிய தன்மை இந்த பாக்குகளுக்கு உண்டு.துவர்ப்புச்சுவை கொண்ட பாக்குகள், மிகச்சிறந்த மலமிளக்கியாக உள்ளன. கழிவுகளையும், நச்சுக்களையும், நீக்கி குடலை சுத்தப்படுத்தக்கூடியது.. இயற்கையான கால்சியம் சத்துக்கள் நம்முடைய உடலில் சேரவும் உதவுகிறது.கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை இந்த பாக்குகள்..குறிப்பாக, இரைப்பையில் உள்ள தொற்றுகளை அகற்றக்கூடியவை..பற்கள் உறுதியாக இருக்க வேண்டுமானால், கொட்டை பாக்கை சுட்டு பவுடராக்கி,அதில் பற்களை தேய்த்து வந்தால் போதும். கொட்டை பாக்கை தூளாக்கி பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்றும் உறுதியாகவும் திகழும். பித்தம் அகிமாக உள்ளவர்கள், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணும்போது பித்தம், வாதம் இரண்டுமே கட்டுக்குள் வந்துவிடும். காரணம், பாக்கில் உள்ள துவர்ப்பு சத்துதான், பித்தத்தை கட்டுக்குள் வைக்க முக்கிய காரணமாகும்.துவர்ப்பு நிறைந்த இந்த கொட்டை பாக்கில் டீ தயாரித்து குடிப்பார்கள்.. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது..

இப்படி சில நன்மைகளை பாக்குகள் தந்தாலும்,கெடுதலைதான் அதிகம் தருகிறதாம்.இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் அண்ட் பீடியாட்ரிக்ஸ் ஆன்காலஜி டிரஸ்டட்,அமெரிக்கன் சொசைட்டி ஃபார் க்ளினிக்கல் நியூட்ரிஷியன் போன்ற ஆய்வுகளில் இந்த பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன நன்மைகள்: ஆனால்,இந்த கொட்டை பாக்குகள் நன்மைகளை தருவது போலவே, சில தீங்குகளையும் உடலுக்கு தரலாம் என்கின்றன ஆய்வுகள்.அதாவது, நாம் வெற்றிலை போடுவதற்கும், வாய், உணவுக்குழாய் புற்றுநோய்க்கும் நிறைய தொடர்புகள் உள்ளனவாம். முக்கியமாக ஃபைப்ரோஸிஸ்க்கு வாய்ப் புற்றுநோய்க்கு அதிக ஆபத்து இருப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன.இதய நோய், உடல் பருமன் போன்றவற்றுக்கும் தொடர்பு கொண்டுள்ளதாம்.

சிலருக்கு கொட்டை பாக்கு பயன்படுத்தும்போது, வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறுகள் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரக நோய், இதய நோய், குறைந்த ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், போன்றவை ஏற்படலாம் என்கிறார்கள்.. இது மாரடைப்பு, கோமா வரை கொண்டுபோய் விட்டுவிடுவாம். சிக்கல்கள்: நீண்ட காலமாகவே பாக்கு பயன்படுத்துபவர்களுக்கு இப்படியான சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. எந்நேரமும் கொட்டைப்பாக்கை மென்றால், பல் ஈறுகள் பாதிக்கப்படும்.. பற்கள் கறை படிவதுடன், ஈறுகளும் வலுவிழந்துவிடும். அதேபோல, கொட்டை பாக்குகளை தொடர்ந்து சாப்பிட்டால், மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம் என்கிறார்கள்.. கர்ப்பிணிகள் கொட்டை பாக்குகளை தொடவே கூடாது. ஆஸ்துமா நோயாளிகள் இதை தவிர்க்கலாம்.. வலிப்பு நோயாளிகள் இதய கோளாறுகள் உள்ளவர்களும், ரத்த அழுத்த பிரச்சனை பிரச்சனை உள்ளவர்களும், கொட்டை பாக்குகளை தவிர்க்கலாம்.. எனவே, வெற்றிலையுடன் மிக குறைந்த அளவில் பாக்குகளை எடுத்து கொண்டால், அது சிறந்த மருந்தாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News