25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


புற்றுநோய்,உஷ்ண கோளாறுகளை தவிர்க்க ஆரஞ்சு பழங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புற்றுநோய்,உஷ்ண கோளாறுகளை தவிர்க்க ஆரஞ்சு பழங்கள்

புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதில் ஆரஞ்சு பழத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. தினமும் 1 ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தாலே, பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் வரும் ஆபத்து குறைந்துவிடுகிறதாம்.இதயத்திற்கு நன்மை தரக்கூடிய பழங்களில் ஆரஞ்சு  உதவுகிறது.. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது. இப்பழத்திலுள்ள பொட்டாசியம் சத்துக்கள், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்து ,கொழுப்பை குறைக்க உதவுகிறது. உடலிலுள்ள தேவையற்ற கலோரிகளை எரிக்கவும், டயட்டில் இருப்பவர்களும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் ஆரஞ்சு பழத்தை விட்டுவிடக்கூடாது. பெண்களுக்கு பரவலாக ஏற்படும் ரத்த சோகையை விரட்டுகிறது. கர்ப்பிணிகள் தவறாமல் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது ,கர்ப்பத்திலுள்ள குழந்தைகள் தோல் , கண் பார்வை ஆரோக்கியம் பெறுகின்றனர்.
குளிர்ச்சி தரக்கூடிய இந்த பழம், உடலிலுள்ள உஷ்ணத்தை விரட்டியடிக்கக் கூடியது. உடல் சூடு, சிறுநீர்கடுப்பு, மூல வியாதி போன்ற உஷ்ண கோளாறுகளை தவிர்க்க ஆரஞ்சு பழங்கள் உதவுகின்றன.சிறுநீர் கோளாறுகள் இருப்பவர்கள், இரவு தூங்கும்முன்பு, அரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலே நிவாரணம் கிடைத்துவிடும். நார்ச்சத்து நிறைந்த இந்த ஆரஞ்சு பழம், செரிமானத்துக்கு தூண்டுகிறது. மூட்டு வலி, உடம்பில் அதிக உப்பு சத்து போன்ற உபாதைகளுக்கு இந்த ஆரஞ்சு பழமே கைகொடுக்கிறது.

ஆரஞ்சு தோலிலும் பல நன்மைகள் உள்ளன. இந்த தோலை காயவைத்து, பவுடர் செய்து வைத்து கொண்டால் போதும். பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும். குறிப்பாக, உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள், இந்த பவுடரை சுடுநீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனால் வாந்தி, நெஞ்செரிச்சல், பித்தம் போன்ற தொந்தரவும் நீங்குகிறது. சீரான செரிமானமும் நடைபெறும். நன்றாக பசியும் எடுக்கும். சளி, இருமல், போன்ற சுவாச கோளாறுகள் இருந்தால், அப்போதும் இந்த பவுடர் கை கொடுத்து உதவும். நெஞ்செரிச்சல் இதற்கெல்லாம் காரணம், இந்த ஆரஞ்சு தோலில் பாலிபினால்கள் நிறைய உள்ளன. தோல் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுவதே இந்த பாலிபினால்கள்தான். ஆரஞ்சு பழங்கள், சிட்ரஸ் வகையை சேர்ந்தவை என்பதால், உணவுக்கு பிறகுதான் ஆரஞ்சு சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றில் அமிலம் உண்டாக்கிவிடும். எனவே, இந்த ஆரஞ்சுபழத்தை அசிடிட்டி, அஜீரண பிரச்சனை இருப்பவர்கள், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் தவிர்க்கலாம்.மார்பு மற்றும் வயிற்றில் எரியும் உணர்வை அதிகரிக்கும். இருமல் உள்ளவர்களும் இதை தவிர்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News