ஏழைகளின் தங்க பஸ்பம் பொன்னாங்கண்ணி கீரை
இரு வகைகளில் பொன்னாங்கண்ணி கிடைக்கிறது. பச்சை நிறத்தில் இருப்பது. நாட்டு பொன்னாங்கண்ணி என்றும், சற்ற சிவப்பு நிறம் கலந்து இருப்பது சீமை பொன்னாங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு வகை நிறக் கீரைகளுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான சத்துக்கள் கொண்டவை. பொன்னாங்கண்ணி இந்தியாவில் பல இடங்களில் பயிராகக் கூடிய கொடி வகையை சேர்ந்த கீரை .எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடியது. இக்கீரையில் கால்சியம், பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, இரும்புச் சத்து மற்றம் வைட்டமீன் சி.ஏ போன்ற சத்துக்கள் அதிகளவில் தரக்கூடியது. பொன்னாங்கண்ணி கீரையை வாரம் ஒரு முறையோ அல்லது10 நாட்களுக்கு ஒரு முறையோ, தவறாமல் உணவில் எடுத்து கொள்வது நல்லது.
கண் நோய், சர்க்கரை குறைபாடு நோய்த்தொற்று, கொலஸ்ட்ரால், சத்துக் குறைவு, ரத்த சோகை, உடல் சூடு, மூல வியாதி, வாதநோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது. மேலும், தோலுக்க பொன்னிறத்தையும், நல்ல மினுமினுப்பையும் தரக்கூடியது.தினமும் பொன்னாங்கண்ணி கீரையை உண்டு வர தேகம் அழகு பெறும். உப்பில்லாமல் வேக வைத்து, வெண்ணெய் சேர்த்து40 நாட்களுக்கு உண்ண, கண் நோய்கள் நீங்கும். இக்கீரையுடன் பூண்டு அதிகம் சேர்த்து அடிக்கடி உண்டு வர மூலவியாதி நீங்கும். பொன்னாங்கண்ணி கீரையை அரைத்து சிறு சிறு வில்லைகளாகத் தட்டி காய வைத்து கண்களில் வைத்து கட்டி கொள்ள சூடு குறைந்து, கண் நோய்கள் நீங்கும்.வாரம் இரண்டு முறையாவது இக்கீரையை சாப்பிட்டு வர மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியும், நன்றாக செயல்படவும் உதவி செய்யும். சிறுநீர் எரிச்சல் நீங்கவும், சிறுநீரகம் நன்கு செயல்படவும் பொன்னாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். கால்சியம் இரும்பு மற்றம் தங்கச் சத்துக்கள் பொன்னாங்கண்ணியில் இருப்பதால் இது ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படுகிறது.
0
Leave a Reply