இராஜபாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு
இராஜபாளையம் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலை வருடக்கணக்கில் குண்டும் குழியுமாக காணப்பட்டு வருவதற்கு தீர்வு காணும் வகையில் ராஜபாளையத்தில் சீரமைக்கும் பணி தொடங்கியதால் வாகன ஒட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இராஜபாளையம் வழியே செல்லும் திருமங்கலம் ,கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை கண்மாய் முதல் ஜானகிராம் மில் வரை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து காணப்பட்டது. ஏற்கனவே பாதாள சாக்கடை பணிகளுக்காக நகர்ப்பகுதி நடுவே செல்லும் இந்த ரோட்டில் தோண்டப்பட்டு முறையாக மூடாமல் இருந்ததால் பல்வேறு விபத்துக்களுக்கு காரணமாக இருந்து வந்தது.
இதுகுறித்து பல்வேறு கட்சியினர், சமூக அமைப்புகள், தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான பேராட்டம் முன்னெடுப்பின் பலனாக நான்கு வழிச்சாலை இல்லாத நெடுஞ்சாலையில் சீரமைக்கும் பணி இராஜபாளையத்தில் தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெறும் இப்ப பணியால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
0
Leave a Reply