குற்றாலத்தில் சீசன்
தென்காசி மாவட்டம்,குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலத்தில் சீசன் துவங்கியது.
தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் உலகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் குற்றால அருவிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டது.
இந்த நிலையில் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றால அருவியில் தற்போது தண்ணீர்வரத்து துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்துமகிழ்ந்து செல்கின்றனர்.
மேலும் இந்த மழை மலைப்பகுதியில் தொடர்ந்து நீடிக்குமேயானால் வரக்கூடிய காலங்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply