25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையத்தில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையத்தில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை

இராஜபாளையம் நகரச்  செய்திகள்

 

வடக்கு  மலையடிப்பட்டி சஞ்சீவிநாதர் சிவன் கோயிலில் சித்தர்கள் குருபூஜை

இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி சஞ்சீவி நாதர் சிவன் கோயிலில் 18 சித்தர்கள் குருபூஜை விழா நடந்தது அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன.இராஜபாளையம் நகராட்சி தலைவர் பவித்ரா, தொழிலதிபர் ராம் சிங் ராஜா பங்கேற்று வேட்டி சேலை வழங்கினர் அன்னதானம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை சஞ்சீவிநாதர் திருக்கோயிலில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். 

இராஜபாளையம் விவசாய கமிட்டி சார்பில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள்

இராஜபாளையம் விவசாய கமிட்டி சார்பில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. மேற்கு  தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் கோயில் வளாகத்தில் வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். அடுத்து ஆற்றிலும் பூஜை நடந்தன ராஜிக்கள் நான்குகோட்டை, தலைவர் சின்ன வெங்கட்ட ராஜா உள்ளிட்ட சாவடி தலைவர்கள், நகராட்சி தலைவர் பவித்ரா கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விவசாய கமிட்டி தலைவர் முருகன் நிர்வாகிகள் விவேகானந்த ராஜா, வெங்கடேச ராஜா செய்திருந்தனர். 

இராஜபாளையத்தில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை 

இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய கூலி ஆள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேளாண் துறை முறையான ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கின்றனர். ஆள் கிடைத்தாலும் பணிகளில் முழுத்திறனையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக இயந்திர நடவினை நாடி வருவதுடன், ஏக்கருக்கு ரூ.2500 வரை மீதம்  ஆவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இயந்திரநடவை செய்தால் விதை நெல் முதல் நடவு கூலியாட்கள் வரை ஏக்கருக்கு ரூ2500 வரை மீதமாகிறது. இதுகுறித்து அரசு சார்பில் வேளாண்துறை அதிகாரிகள் விளக்கி கூறி தெளிவு படுத்தினால் விவசாயிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News