சமூக ஆர்வலர் ராகவா லாரன்ஸ்
நடிகராகவும், டான்ஸ் மாஸ்டர்,இயக்குனர் சமூக ஆர்வலர்என்று பல முகத்தைக்கொண்ட ராகவா லாரன்ஸிடம்உதவி கேட்டு ஒருமாணவன் சில தினங்களுக்குமுன்பு வீடியோ வெளியிட்டுஇருந்த நிலையில் ,மாணவனின் வீட்டிற்கேசென்று ராகவா லாரன்ஸ்இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.அந்தமாணவனின் படிப்பு செலவைஇனி நான் ஏற்றுக்கொள்கிறேன்என்று வீட்டிற்குசென்று லாரன்ஸ் சொல்லஅந்த மாணவன் மற்றும்அவருடைய குடும்பத்தினர்கண் கலங்க நன்றிகூறி இருக்கிறார்.
அந்த வகையில் சமூகவலைதளத்தை திறந்தாலே லாரன்ஸ்செய்யும் உதவிகள் வீடியோதான் இப்போது இணையத்தில்குவிந்து கொண்டிருக்கிறது.எந்த எதிர்பார்ப்பும்இன்றி ராகவா லாரன்ஸ்பலருக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில்குழந்தைகளின் படிப்பு செலவுக்காகஉதவி கொண்டிருந்தலாரன்ஸ் அதைத்தொடர்ந்துமுதியோரின் அடிப்படை வசதிகள், கணவனை இழந்த பெண்களுக்குஉதவிகள் என்று அடுத்தடுத்துதன்னுடைய உதவிகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்... தன்னிடம் வரும் மனுக்களுக்குதகுந்த உதவிகளை செய்துவரும் லாரன்ஸ் எளிமையின்சிகரமாக இருப்பதை பார்த்துபலரும் பாராட்டி அவரைவாழ்த்தி வருகிறார்கள்.
சில தினங்களாக அவருடையவீடியோஸ் இணையத்தில்வேகமாக பரவி வருகிறது.அதில் ஒரு வீடியோவில்கிராமத்தில் ஏழைகளுக்குடிராக்டர் கொடுக்க போனலாரன்ஸ் மாஸ்டர் ஒருதோட்டத்தில் சாப்பிட்டுவிட்டு புல் தரையில்ஒரு துணியை மட்டும்விரித்து அதில் படுத்துதூங்குவதை பார்த்து பலர்வியந்து போய் விட்டார்கள்.நடிகர், இயக்குனர், டான்ஸ்மாஸ்டர் என்று பலதிறமைகள் வைத்தும் கஷ்டப்பட்டுஎவ்வளவு பணம் சம்பாதிச்சும்இவருடைய எளிமை இப்போதுபலரையும் இவரை போலவேசேவை செய்ய தூண்டிக்கொண்டிருக்கிறது.விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கிய ராகவா லாரன்ஸ்'சேவையே கடவுள்' என்ற பெயரில் அறக்கட்டளையை நடிகர் ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார்"கடன்சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனையை ஏற்படுத்தியதால், அவர்களுக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்தேன்" என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.. இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லையாடி வருகை புரிந்த நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அங்குள்ள பொதுமக்கள், ரசிகர்கள், மாணவ மாணவிகள், பெண்கள் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ்,"விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வதாக வரும் செய்திகள் தன்னை மிகுந்தவேதனைக்குள்ளாக்கியது. இதனை போக்கும் வகையில் விவசாயிகளுக்காக, உபகரணங்கள் வழங்க முடிவு செய்து மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறேன். இங்கு வழங்கி உள்ளடிராக்டரை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.. அது எனக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply