சோயாசாதம்
தேவையானபொருட்கள் : பச்சரிசி -2 கப், சோயாஉருண்டைகள்அரைகப், பெரியவெங்காயம்- 2, இஞ்சி,பூண்டுவிழுது -2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் 4 டீஸ்பூன், தயிர்-அரைகப், கரம்மசாலாத்தூள் -1 டீஸ்பூன், சீரகம்-அரைடீஸ்பூன், எண்ணெய், நெய்-தலா 2டேபிள்ஸ்பூன்,உப்புதேவைக்கு.
செய்முறை:
சோயாவை கொதி நீரில் ஐந்து நிமிடம் ஊற வைத்து பிறகு பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில், சன்னமாக நறுக்குங்கள்.
குக்கரில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, சீரகத்தை தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக வதக்குங்கள். பிறகு உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோயா ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். பிறகு அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வையுங்கள்.
ஒரு விசில் வந்ததும் தீயை மிதமாக்கி, இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.
0
Leave a Reply