25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சன் பிக்சர்ஸ் “ ஜெயிலர் ”   படம்  திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.   ரஜினியின்  ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சன் பிக்சர்ஸ் “ ஜெயிலர் ” படம்  திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. ரஜினியின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்

.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள ஜெயிலர் படம். டிக்கெட் புக்கிங் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில்ஜெயிலர் பட உரிமத்தை வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது,சன் பிக்சர்ஸ்.ரஜினிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இங்கு இவருடைய படத்தின் ரிலீஸ் நாளை எப்படி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்களோ அதே போல் மலேசியாவிலும் ரஜினி படம் திருவிழா போல் கொண்டாடப்படும்.அதன் காரணமாகவே வெளிநாடுகளிலும் ரஜினியின் படங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். ஆனால் இந்த முறை அதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ரஜினியின் படத்தை வழக்கமாக வாங்கும் வெளிநாட்டு விநியோகஸ்தர் மாலிக் இந்த முறை ஜெயிலரின் உரிமையை ஆறு கோடிக்கு விலை பேசி இருந்தார்.இவர் ஒரு லாபகரமான விநியோகஸ்தர் என்பதால் பொதுவாக ரஜினி பட உரிமம் இவருக்கு தான் கிடைக்கும். ஆனால் இப்போது இவருக்கே பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது அமலாக்கத்துறை பிரச்சினையை சந்தித்து வரும் இவரால் ரஜினி படத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஏனென்றால் தற்போது பணப்புழக்கம் செய்ய முடியாத சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார். இவரை தவிர மலேசியாவில் சொல்லிக்கொள்ளும்படியான விநியோகஸ்தர்கள் கிடையாது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த சன் பிக்சர்ஸ் தற்போது லோட்டஸ் நிறுவனத்திற்கு ஜெயிலர் பட உரிமத்தை வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.அடி மாட்டு விலைக்கு விற்பனையாகி இருந்தாலும் படம் வெளி வந்தால் பல மடங்கு கலெக்சனை தட்டி தூக்கி விடலாம் என சன் பிக்சர்ஸ் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

ரஜினியின் ரசிகரான தனுஷ் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு சேர்ந்து படம் பார்த்தார்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான ஜெயிலர் படத்தை நடிகர் தனுஷ், கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் படம் பார்த்தார். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான தனுஷ், இதற்கு முன் வெளியான லிங்கா, காலா, கபாலி போன்ற படங்களை எல்லாம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்துள்ளார். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை ரசிகர்களோடு சேர்த்துப்பார்த்தார்.அதே போல சென்னையில் உள்ள குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ஜெயிலர் படம் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத், நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வந்திருந்தனர். அங்கு ரசிகர்களோடு சேர்ந்து பாட்டுப்பாடி அசத்தினார்.பெரிய எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ஜெயிலர் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இரண்டு வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் படம் வருவதால் அவரது ரசிகர்கள் இதனை ஒரு திருவிழா போலவே கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர். கட் அவுட்டுகள், பேனர்கள் என திரையரங்குகள் களைகட்டியிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு சிறிய ஏமாற்றமாக இருப்பது அதிகாலை காட்சி இல்லாததுதான்.

படமானது தங்களுக்கு முழு திருப்தியை கொடுத்திருப்பதாகவும்; முழுக்க முழுக்க ரஜினி படத்தில் மாஸ் செய்திருக்கிறார்; யோகிபாபு - ரஜினியின் காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என பெரும்பாலானோர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்துவிட்டார். பீஸ்ட்டால் ரோஸ்ட் செய்தவர்களுக்கு பதிலடி அளித்திருக்கிறார் எனவும் கூறுகின்றனர்.படத்துக்கு பெரும்பாலானோரிடத்திலிருந்து பாசிட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தையும் கூறிவருகின்றனர். அதாவது ஜெயிலர் படத்தின் திரைக்கதை மோசமாக இருக்கிறது; கதை ஆங்காங்கே சொதப்பியிருக்கிறது. டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவே இல்லை. முதல் பாதி பரவாயில்லை ரகம். இரண்டாம் பாதி மோசம் என பதிவிடுகின்றனர்.இந்தப் படம் தற்போது சில ஷோக்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். முதல் பாதி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது பாதி குறித்தும் நல்ல விமர்சனங்களே வந்துள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News