25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த" ஆடு ஜீவிதம்" திரைப்படம்

சிறந்த நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ்,.மலையாள திரையுலகில் இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் “ஆடு ஜீவிதம்”.உண்மையாக நடந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தை பிரபல இயக்குனர் பிளஸ்ஸி இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரித்விராஜ் உடன் இணைந்து அமலா பால் ஜோடியாக நடித்திருந்தார்.பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த" ஆடு ஜீவிதம்". திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. கண்டிப்பாக இப்படத்திற்காக பிரித்விராஜ் மற்றும் இயக்குனர் பிளஸ்ஸிக்கு தேசிய விருது கிடைக்கும் என கூறப்படுகிறது.இப்படம் வெளிவந்து சிலநாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் பலகோடிகளுக்கு வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது 

படத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் வெளிவரமுடியவில்லை - உணர்ச்சிவசப்பட்ட யோகி பாபு

கேரளாவைச் சேர்ந்த நஜீப் வேலைக்காக அரபு நாடுக்குச் சென்று, அங்குள்ள முதலாளியால் ஏமாற்றப்பட்டு ஆடு மேய்க்கப் பணிக்கப்படுகிறார். பாலைவனத்தில் 700 ஆடுகளுடன் தன்னந்தனியாக வசிக்க நேர்கிறது. ஒருகட்டத்தில் தன்னையும் ஒரு ஆடாக கருதிக் கொள்ளும் அளவுக்கு மனதளவிலும், உடலளவிலும் நிலைமை மோசமாகிறது.

இந்த கடின காலத்தைத் தாண்டி எப்படி நஜீப் உயிர் பிழைத்தார் என்ற உண்மைச் சம்பவத்தை பென்யாமின் ஆடு ஜீவிதம் என்ற நாவலாக எழுத, அதனடிப்படையில் பிளெஸ்ஸி ஆடு ஜீவிதம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

14 வருட உழைப்பில் ஆடு ஜீவிதம் படம் உருவாகியிருக்கிறது. நஜீப்பாக பிருத்விராஜ் நடித்துள்ளார். நேற்று வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. படத்தை சிறப்புத் திரையிடலில் பார்த்த கமல், மணிரத்னம் படத்தையும், இயக்குநர் பிளெஸ்ஸியையும், பிருத்விராஜையும் மற்றுமுள்ள படக்குழுவினரையும் பாராட்டினர். யோகி பாபுவும் படத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

அவர் தனது எக்ஸ்தள பதிவில், “இன்னும் அதன் பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. வலிமிகுந்த இந்தப் பயணம், சினிமா விரும்பிகளுக்கு நல்ல ட்ரீட்டாக இருக்கும். சீட் நுனில் உட்கார வைத்த சர்வைவல் த்ரில்லர் மஞஞுமல் பாய்ஸ் போன்றதல்ல… அதற்கேயுரிய வேகத்தில் பயணிக்கும் ஒரு எமோஷனல் ட்ராமா, த கேட் லைஃப். இதன் உயிரே பிருத்விராஜ்தான். மம்முட்டி, மோகன்லாலுக்குப் பிறகு ஆடு ஜீவிதம் படத்தில் பிருத்விராஜின் நடிப்பு இன்னும் பல வருடங்களுக்கு நினைவுகூரப்படும். உங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சல்யூட்…” என உணர்ச்சிப்பெருக்குடன் கூறியுள்ளார். 

ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமின்றி திரையுலகினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் ஆடு ஜீவிதம் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் சாதனை படைத்து வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News