வழுவழு சருமத்தை பெற
நன்கு கனிந்த வாழைப்பழம் மாஸ்க் போடுவதற்கு ஏற்றது. நன்கு கூழ் போல மசித்த வாழைப்பழத்தை எடுத்து முகத்தை அப்ளை செய்யவும். பத்து முதல் 15 நிமிடம் வரை ஊறவைத்து பின்னர் முகத்தை கழுவவும். பின்னர் ஐஸ் க்யூப்பால் ஜில்லென்று ஒற்றி எடுக்கவும். சருமம் அழகாக புத்துணர்ச்சியாக மாறும்.
வாழைப்பழத்துடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ சருமம் வழுவழுப்பாய் மென்மையாக மாறும். வாழைப்பழத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் பால் கலந்து நன்கு கூழ் போல மாற்றவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ சருமம், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். குறைந்த விலையில் இயற்கையான பேஸ்மாஸ்க் போட்டு வழுவழு சருமத்தை பெறலாம்.
பயத்தம் மாவு மற்றும் கசகசாவை அரைத்துப் பூசினால், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் மறையும்.பயத்தம் மாவை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். வாரம் 1 முறையோ அல்லது 2 முறையோ இதைச் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முக அழகு கூடும்.
கொத்தமல்லி மற்றும் புதினா இலையை அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் Share காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.
0
Leave a Reply