25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வழுவழு சருமத்தை பெற
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வழுவழு சருமத்தை பெற

நன்கு கனிந்த வாழைப்பழம் மாஸ்க் போடுவதற்கு ஏற்றது. நன்கு கூழ் போல மசித்த வாழைப்பழத்தை எடுத்து முகத்தை அப்ளை செய்யவும். பத்து முதல் 15 நிமிடம் வரை ஊறவைத்து பின்னர் முகத்தை கழுவவும். பின்னர் ஐஸ் க்யூப்பால் ஜில்லென்று ஒற்றி எடுக்கவும். சருமம் அழகாக புத்துணர்ச்சியாக மாறும்.

வாழைப்பழத்துடன் சிறிதளவு ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ சருமம் வழுவழுப்பாய் மென்மையாக மாறும்.  வாழைப்பழத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் பால் கலந்து நன்கு கூழ் போல மாற்றவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ சருமம், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.  குறைந்த விலையில் இயற்கையான பேஸ்மாஸ்க் போட்டு வழுவழு சருமத்தை பெறலாம்.

பயத்தம் மாவு மற்றும் கசகசாவை அரைத்துப் பூசினால், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் மறையும்.பயத்தம் மாவை முகத்தில் தேய்த்து கழுவ வேண்டும். வாரம் 1 முறையோ அல்லது 2 முறையோ இதைச் செய்து வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முக அழகு கூடும்.

கொத்தமல்லி மற்றும் புதினா இலையை அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் Share காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News