முடியின் வளர்ச்சி மேம்பட..
நல்லெண்ணெய் தலைமுடி வறட்சியடைவதைத் தடுக்கும். நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி நன்கு மசாஜ். செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் சீயக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால், முடி வறட்சியின்றி பட்டுப்போன்று இருப்பதோடு, உடல் சூடும். தணியும் நல்லெண்ணெய் பாதிக்கப்பட்ட தலைமுடிக்கு புத்துயிர் அளிக்கிறது. நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், முடியின் வளர்ச்சி மேம்படும்.பொடுகு தொல்லை நீங்கும்.
தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வர பொடுகு மறையும்.
பொடுகு தொல்லை நீங்க வெந்நீரில் வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தலைமுடி மிருதுவாக நீளமாக ஆரோக்கயமாக வளர,தயிரை மயிர்க்கால்களில் படும்படி நன்றாக மண்டையில் தேய்த்து ,இருபது நிமிடங்கள் ஊறவைத்து, பின்குளித்து வர பொடுகு நீங்கும்.
0
Leave a Reply