சருமத்தில் ஈரத்தன்மையை தக்க வைக்க.....
வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பானங்களுடன் உங்களின் நாளைத் துவங்குவதே சருமத்துக்கு ஊட்டமளிப்பதற்கான சிறந்த வழியாகும்.சருமத்தில் ஈரத்தன்மையை தக்கவைத்து, பொலிவாக தோற்றமளிப்பதில், ஊட்டச்சத்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.சீமை சாமந்தி, ரோஜா மற்றும் செம்பருத்தி ஆகிய பூக்களை சேர்த்து மூலிகைதேநீராகவோ, தண்ணீருடன் கொதிக்க வைத்தோ குடிப்பதால், உடலை நீரேற்றமாக வைக்கலாம்.இளநீர் சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் எரிச்சலைத் தணிக்கவும், சிவப்பைக் குறைக்கவும் உதவும்.வெள்ளரிக்காய் உடலின் நீரேற்றம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும்; தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும் சிலிக்கா என்ற கனிமத்தைக் கொண்டுள்ளது.கேரட்டிலுள்ள வைட்டமின் ஏ தோல் செல்களை மேம்படுத்தி, சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது.
0
Leave a Reply