வெள்ளை முடி மறைய
நெல்லிக்காயை வெட்டி வெயிலில் உலர்த்தி பின் அதனை எண்ணெயில் போட்டு அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தான், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.
நெல்லிக்காயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதைக் கொதிக்க வைத்து, வாரத்திற்கு இருமுறை முடிகளில் தடவி வந்தால், நரைமுடிகள் மறைந்து ஒரிஜினல் நிறம் கிடைக்கும்.
சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கன் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.
உங்கள் உச்சந்தலையை நெல்லிக்கனி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது தலைமுடியை வலுவாக்கி, முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். இது இரத்த ஓட்டத்தையும் சீராக்கி, உச்சந்தலைக்கு ஊக்கம் அளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகமாக்குகிறது. இதன் கிருமி எதிர்ப்பு தன்மை பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பை கட்டுப்படுத்துகிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தும் முன், கொஞ்சம் சூடாக்கி, வாரம் இரு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளவும்.
0
Leave a Reply