25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


லெஜண்ட் சரவணன் கனவு   நனவு  அடைய  வாழ்த்துக்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லெஜண்ட் சரவணன் கனவு நனவு அடைய வாழ்த்துக்கள்

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான லெஜண்ட் சரவணன் , நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தனது நிறுவனம் தொடர்பான விளம்பர படங்களில் நடித்து வந்த  சரவணன் அடுத்ததாக   தி லெஜண்ட் வெள்ளித்திரையில்  கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக   வரும் 28ந் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்கி உள்ளார். இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் பழம் பெரும் நடிகை சச்சு,  விவேக், பிரபு, யோகிபாபு, நாசர், மயில்சாமி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்தது.

லெஜண்ட், சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என கனவு. அந்த கனவை அடைய நிறைய உழைக்க வேண்டி இருந்தது. வியாபாரத்தில் கடுமையாக உழைத்து ஓர் இடத்தை பிடித்து அதற்கான கனவை நோக்கி நடந்தேன். தற்போது தான் அதற்கான நேரம் கிடைத்துள்ளது என்று  அழகாக பதிலளித்துள்ளார் தி லெஜண்ட்.


இத்திரைப்படம் ஜூலை 28ந் தேதி வெளியாக உள்ள நிலையில்,   பான் இந்திய திரைப்படமாக இத்திரைப்படம் வெளியாக உள்ளதால், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழியில் மாறி மாறி பேசி அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை திகைப்பில் ஆழ்த்தி,ஒரு பத்திரிக்கையாளர், “இந்த வயதில் ஏன் நடிக்க வந்தீர்கள்”?என்று கேட்டார்.அதற்கு  சிரித்தபடி பதில் அளித்த லெஜண்ட் சரவணன்,     என்னைவிட வயதில் மூத்தவர்கள் இந்தியில் அமிதாப் பச்சன்,ரஜினி,கமல், சரத்குமார் அனைவரும் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்வி கேட்பீர்களா? என  பதில் அளித்தார்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர், இந்த வயதில் ஏன் நடிக்க வந்தீர்கள் என கேட்டார். இதற்கு  சிரித்தபடி பதில் அளித்த லெஜண்ட் சரவணன், இந்தியில் அமிதாப் பச்சன் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதே போல ரஜினி,கமல், சரத்குமார் என அனைவரும் என்னைவிட வயதில் மூத்தவர்கள் அவர்கள் அனைவரும் இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்வி கேட்பீர்களா? என  டக்னு பதில் அளித்தார். 




 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News