25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உலக யோகா தின விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக யோகா தின விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தின விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக வாழும் கலை அமைப்பின் உறுப்பினர்களான  ஆசிரியர் சுகந்தி மற்றும் திருமதி. விஜயலட்சுமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் வரவேற்புரை ஆற்றி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தார்.

 சிறப்பு விருந்தினர் தனது உரையில் உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்றார் திருமூலர். உடல்நலத்திற்கு பெரும் பங்கு வகிப்பது யோகக் கலை ஆகும். உடல், மனம், உணர்வு ஆகிய ஒற்றைப் புள்ளியில் பயணிப்பதே யோகா என்றும் அத்தகைய யோகக் கலைகளான கபாலபதி, நாடி சுத்தி, பிராணாயாமம் போன்ற யோக கலைகளை மாணவர்களுக்கு செய்து காட்டினார்.
மேலும் உளியால் அடிவாங்கிய கல் தான் கோயில் கர்ப்பகிரகத்தில் ஒளிர்கின்றன. அதைப்போல மாணவர்களும் வலி என்பது தன்னை வளப்படுத்தவே என உணர வேண்டும் என்று  கூறியும் யோகா தினத்தை  தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி போன்றவற்றின் மூலம் கொண்டாடினர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News