மக்களுக்கு இடையூறாக உள்ள தெரு நாய் பிரச்சனை,ரோட்டோர மீன் கடைகள்
இராஜபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் பவித்ரா தலைமையில் நடந்தது. துணை தலைவர் கல்பனா, கமிஷனர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். பஸ் ஸ்டாண்ட் இணைப்பு ரோட்டில் இரு புறமும் உள்ள ரோட்டோர மீன் கடைகள் மக்களுக்கு இடையூறாக உள்ளதாக இராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினர். தெரு நாய் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இராஜபாளையம் மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லை இது குறித்து கவுண்சிலர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். 42வது வார்டில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது.
பவித்ரா நகராட்சி தலைவர் இது குறித்து ஏற்கனவே கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் கவுன்சிலர்களுக்கு மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து விவரிக்க ஏற்பாடு செய்யப்படும். சீனிவாசன் 42வது வார்டில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. பவித்ரா சாலை, மின் விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .
0
Leave a Reply