25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 04, 2026

"நல்ல வேலையை" விட்டுவிடுவது என்பது வெற்றியை விட்டு விலகிச் செல்வது அல்ல என்பதை இவர்களின் பயணங்கள் காட்டுகின்றன.

ஏர்டெல்லில் இருந்துரூ.2 கோடிமதிப்புள்ள ஊறுகாய்பிராண்டாகமாறியுள்ள வசுதா போகராஜு  ஏர்டெல்லில்இருந்துரூ.2 கோடிமதிப்புள்ளஊறுகாய்பிராண்டாகமாறியுள்ளார்.ஏர்டெல் உட்படஐடி,வங்கிமற்றும் தொலைத்தொடர்புஆகியவற்றில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாககார்ப்பரேட்பதவிகளில் பணியாற்றியபிறகு, வசுதாபோகராஜு 2015 ஆம்ஆண்டில்தனதுநல்லசம்பளம்தரும்வாழ்க்கையைவிட்டுவிட்டு, தனதுதாயாரின்வீட்டில்தயாரிக்கப்பட்டஊறுகாய்முயற்சியைஒருகட்டமைக்கப்பட்டநிறுவனமாகமாற்றினார்.அவர் நிறுவிய போகராஜுஃபுட்ஸ், தற்போதுஆண்டுக்குசுமார்ரூ.2 கோடிவருவாய்ஈட்டுகிறது, 13 நாடுகளில்ஒவ்வொருஆண்டும்கிட்டத்தட்ட 20 டன்பாதுகாப்புஇல்லாதஊறுகாய்களைவிற்பனைசெய்கிறது. அவரது USP உண்மையான, பாரம்பரிய சமையல் குறிப்புகளில் உள்ளது, கடுமையான தரக்கட்டுப்பாடு மற்றும் உலகளாவிய மின் வணிகஅணுகலுடன் இணைந்து,ஒரு குடும்ப சமையலறை மரபை லாபகரமான சர்வதேச உணவு பிராண்டாக மாற்றுகிறது.

Apr 04, 2026

இந்தியாவின் 'மிதக்கும் கிராமம்'.

இந்தியாவின் 'மிதக்கும் கிராமம்", கேரள மாநிலத்தில் அமைந்திருக்கிறது.கேரள மாநிலம் கொச்சி அருகே 14 சிறிய தீவுகள் உள்ள நிலையில், இதில் ஒன்றாக இருப்பதுதான் கடமக்குடி ஆகும்.இந்த தீவு கிராமம், தண்ணீரில் மூழ்கியது போன்று காணப்படும். அதனால் 'மிதக்கும் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது.சுற்றுலா செல்ல ஏற்ற இடமாகவும் இருக்கிறது. சாலைவழி அல்லது நீர் வழியில் இந்தக் கிராமத்தை அடையலாம்.சொந்த வாகனத்தில் செல்வோர், கொச்சியில் இருந்து தேசிய நெடுஞ் சாலை 66-ல் வடக்கு பரவூர் நோக்கிப் பயணிக்க வேண்டும். அப்போது வரபுஜா பாலத்தை கடந்த பின்பு, கடமக்குடி செல்லும் பிரதான சாலை வரும். அங்கு திரும்பும்போது, அந்த கிராம பெயர் பொறித்த பலகை உள்ளது.அவ்வாறு இல்லை என்றால், எடப்பள்ளி அல்லது எர்ணாகுளம் ஐகோர்ட்டு சந்திப்பில் இருந்துதொடங்கி, கன்டெய்னர் சாலையில் செல்லலாம்.மூன்பில்லி பஸ் நிறுத்தத் துக்கு அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் செல்ல முடியும். மத்திய கொச்சியிலிருந்து பயணித்தால் இந்த கிராமத்துக்குச் செல்ல 30 முதல் 45 நிமிடங்களே ஆகும்.கடமக்குடிக்கு பொதுப் போக்குவரத்து எனில் நேரடி பஸ்கள் குறைவாகவே உள்ளன. விட்டிலா மொபி லிட்டி ஹப் அல்லது எர்ணா குளத்தில் இருந்து நேரடியாக பஸ் மூலம் செல்லலாம்.மெட்ரோ என்றால், கொச்சி யில் இறங்கி சங்கம்புழா நகரை அடைந்து, பின்பு ஒரு வாகனத்தை அமர்த்தி, கடமக்குடி கிராமத்தை அடையலாம்.கடமக்குடிக்கு படகு மூலமாக செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது எர்ணாகுளம் ஐகோர்ட்டு படகுத்துறையில் இருந்து பிஜாலா சென்று, அங்கிருந்து வேறு சிறிய படகு மூலம் கடமக்குடியை அடைந்துவிடலாம்.வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தை விரும்பு வோருக்கு ஏற்ற இடம் இந்த கடமக்குடி.

Apr 04, 2026

டைனோசரின் முழு எலும்புக்கூடு.

அர்ஜென்டினா நாட்டின் வட மேற்குப் பகுதியில் முற்றிலும் வித்தியாசமான ஒரு டைனோசரின் முழு எலும்புக்கூடு தொல் லெச்சமாகக் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட கழுத்து கொண்டது. இது 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது,என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Apr 04, 2026

நில அளவுகள் தெரிந்துகொள்ள…. 

1 சென்ட்  - 435 சதுர அடிகள்.1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்.1 குழி - 44 சென்ட்.1 காணி -132 சென்ட் (3 குழி).1 கிரவுண்ட் 22.96 சதுர மீட்டர் (5.5 சென்ட்).1 கிரவுண்ட் 2400 சதுர அடிகள். ஏக்கர்1 ஏக்கர் - 100 சென்ட் (4840 சதுர கெஜம்).1 ஏக்கர்-  4046.82 சதுர மீட்டர்.1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர்.1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர்.1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்1 காணி-  1.32 ஏக்கர்.1 காணி -57,499 சதுர அடிகள். மீட்டர்1 மீட்டர் - 3.281 அடிகள்.1 கி. மீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்).1 அடி - 12 இஞ்ச் (30.48 செ.மீட்டர்).1 மைல் 1.61 கிலோ மீட்டர்.1 மைல் -5,248 அடிகள்.

Apr 03, 2026

பங்குனி மாதத்தின் 6 முக்கிய விசேஷங்கள்!

1. பங்குனி அமாவாசை (மார்ச் 18): பித்ரு தர்ப்பணம் மற்றும் குலதெய்வ வழிபாட்டிற்குச் சிறந்த நாள்.  2. உகாதி / தெலுங்குப் புத்தாண்டு (மார்ச் 19): புதிய முயற்சிகள், தொழில்கள் தொடங்க மங்களகரமான நாள். 3. கிருத்திகை & சஷ்டி (மார்ச் 23, 24): முருகனை வேண்டி விரதம் இருந்தால் காரியத் தடைகள் விலகும். 4. ஸ்ரீ ராம நவமி (மார்ச் 27): ராமர் அவதரித்த தினம். வீட்டில் பானகம் வைத்து வழிபட வம்சம் தழைக்கும். 5.பங்குனி உத்திரம் (ஏப்ரல் 1): தெய்வத் திருமணங்கள் நடந்த நாள். இதை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். 6. பங்குனி பௌர்ணமி (ஏப்ரல் 1): கிரிவலம் செல்லவும், சத்யநாராயணா பூஜை செய்யவும் மிகச் சிறந்த மகா பௌர்ணமி.

Apr 03, 2026

ஈரக் குப்பைகளை பயோகேஸாக மாற்றி, மார்க்கெட் பகுதிகளுக்கு கொண்டு சென்று எரிவாயுவாக பயன்படுத்துகின்றனர்.

பெங்களூரில் தினமும் வரும் 3,000 டன் ஈரக் குப்பைகளை பயோகேஸாக மாற்றி, மார்க்கெட் பகுதிகளுக்கு கொண்டு சென்று எரிவாயுவாக பயன்படுத்துகின்றனர். அந்த வாயுவை ஹோட்டல்களில் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இப்படி செய்தால் LPG தேவையும் குறையும். குப்பையும் பயனுள்ளதாக மாறும்.

Apr 03, 2026

இந்தியாவுக்கு வந்த ஈரானின் 'ஸ்பெஷல்' கேஸ்!"

உலகமே ஹார்முஸ் ஜலசந்தியில வழி இல்லாம தவிக்க, இந்தியாவுக்கு மட்டும் ஈரான் ரெட் கார்ப்பெட் விரிச்சிருக்கு! "மத்தவங்களுக்கு நோ என்ட்ரி.. ஆனா இந்தியாவுக்கு மட்டும் உண்டு"னு , 93,000 டன் எல்பிஜி ஏத்தின ரெண்டு கப்பலை வழியனுப்பி வச்சிருக்காங்க! அமெரிக்கா-இஸ்ரேல் மிரட்டலையும் மீறி, மங்களூரு-மும்பை நோக்கி வர்ற இந்த கப்பல்கள் தான் நம்ம 3 நாள் தேவையை பூர்த்தி பண்ணப்போகுது. இதுதான் உண்மையான நட்பு!

Apr 03, 2026

"மோடி என்ற மாமனிதனுக்கு எங்கள் பரிசு" 50,000டன் LPG அனுப்பிய அர்ஜென்டினா.

"மோடி என்ற மாமனிதனுக்கு எங்கள் பரிசு" 50,000டன் LPG அனுப்பிய அர்ஜென்டினா.LPG விநியோக தடை ஏற்பட்ட நிலையில், அர்ஜென்டினா 50,000 டன் LPGயை இந்தியாவிற்கு வழங்கி உள்ளது. இது மோடி என்ற மாமனிதனுக்காக எங்கள் பரிசுஎன்றும் கூறி இருக்கிறது.இது இந்தியாவின் பெருமை மட்டுமல்ல, மோடியின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள மதிப்பை மரியாதையை காட்டுகிறது

Apr 02, 2026

கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் சிறிய உயிரினங்களில் ஒன்று..நீல வளைய ஆக்டோப்ஸ்

நீல வளைய ஆச்டோபஸ், கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் சிறிய உயிரினங்களில் ஒன்று.மிகவும் அழகானது, அதே நேரம் ஆபத்தானது.இந்த ஆக்டோபஸ். இந்திய பசிபிக் பெருங்கடல் பகுதிகளில், குறிப்பாக ஆஸ்திரேலியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் கடற்பகுதிகளில் வாழ்கிறது.இவை, பவளப்பாறைகளுக்கு இடையே, மறைந்து வசிக்கும் இயல்புடையவை. சிறு மீன்கள், நண்டுகள் போன்றவற்றை உணவாகக் கொள்ளும்.நீல வளைய ஆக்டோபஸ், 12 முதல் 20 செ.மீ..அளவில் தான் இருக்கும். இதன் விஷம், மிகவும் கொடியது. விஷத்திலுள்ள 'டெட்ரோடோடாக்சின்' எனும் நச்சுப் பொருள், ஒரே கடியின் மூலம், 26 வயது திடகாத்திரமான இளம் வாலிபனை கூட, நிமிடங்களில் கொன்றுவிடும் திறன் கொண்டது.இதன் உடலில் உள்ள நீல நிற வளையங்கள், ஆபத்தை உணரும் போது பிரகாசமாக ஒளிரும். இது, ஒரு எச்சரிக்கை அடையாளம். இந்த வளையங்கள், சாதாரண நிலையில் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.இது கடலின் புத்திசாலித்தனமான உயிரினங்களில் ஒன்று. சூழலுக்கேற்பஉருமாற்றம் செய்து தப்பிக்கும் திறன் கொண்டது. தாக்குதலின் போது மட்டுமே. கடும் விஷத்தை வெளிவிடும். மற்றபடி இது அமைதியான உயிரினம் தான்.நீல வளைய ஆக்டோபஸின் விஷம், அது கடித்தவுடன்,  எதிராளியின் நரம்பு மண்டலத்தை முடக்கி, மூச்சுத்திணறலை ஏற்படுத்தி சாகடித்துவிடும். இதன் விஷம்மனிதர்களையும் மரணிக்க செய்துவிடும் என்பதால், அதைக் காண நேரும் போது, தொடாமல் இருப்பது நல்லது.இதன் ஆயுட்காலம், ஓராண்டு மட்டுமே. இனப்பெருக்கத்தின் போது, பெண் ஆக்டோபஸ் எதையும் உண்ணாமல், முட்டைகளைக் காத்து, அவை பொரிந்ததும் இறந்துவிடும்.அழகும், ஆபத்தும் கலந்த நீல வளைய ஆக்டோபஸ் மறைத்து வைத்துள்ள அதிசயமும், கொடூரமும்,உலக ஆராய்ச்சியாளர்களை ஈர்த்துள்ளது.

Apr 01, 2026

அதிக சம்பளம் வாங்கும் வேலைகளை விட்டுவிட்டுகோடிக்கணக்கில் வருமானம் தரும் தொழில்களை உருவாக்கும் பெண்கள்

மரியா குரியகோஸ் – ஆலோசகராக இருந்துரூ. 1 கோடி மதிப்புள்ள நிலையான ஸ்டார்ட்அப் நிறுவனமாக மாற்றியுள்ளார்.மரியா குரியகோஸ் தனதுஆலோசனைப்பணியைவிட்டுவிட்டு,தேங்காகோகோ என்றகேரளாவைச்சேர்ந்தநிறுவனத்தைத்தொடங்கினார். இதுகைவிடப்பட்டதேங்காய் ஓடுகளை கைவினைப் பொருட்களாக மாற்றும்ஒருநிறுவனமாகும்.இந்தநிறுவனம்சர்வதேசஅளவில்ஆண்டுக்குரூ.1கோடிக்கும்அதிகமானவிற்பனைமற்றும்ஏற்றுமதியைஈட்டுகிறது.அவரது சிறப்பு நிலைத்தன்மை.விவசாயக்கழிவுகளைகைவினைஞர்களின்அதிகாரமளிப்புடன்இணைந்துபிரீமியம்அலங்காரப்பொருட்களாகமாற்றுகிறார். சுற்றுச்சூழலுக்குஉகந்தபொருட்களைவாழ்க்கைமுறைதேர்வுகளாகநிலைநிறுத்துவதன்மூலம், அவர்தனதுவணிகமாதிரியில்லாபத்தையும்நோக்கத்தையும்கட்டமைத்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 82 83

AD's