25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இராஜபாளையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற மோட்டார் சைக்கிள் வாகன விழிப்புணர்வு பேரணி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற மோட்டார் சைக்கிள் வாகன விழிப்புணர்வு பேரணி

விருதுநகர்  மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் (23.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தொடங்கி  வைத்து, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி,  சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி  வைத்து, இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
 இந்த பேரணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, நகராட்சித்துறை, கூட்டுறவுத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து,  வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும்.  ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பதாதைகளை ஏந்தி சென்று, சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி, முக்கிய சாலைகள் வழியாக இராஜபாளையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்  என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கேட்டுக்கொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News