முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பேருந்து நிலையத்தில் (22.03.2024) மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நிகழ்ச்சியினைமாவட்டதேர்தல்அலுவலர்மாவட்டஆட்சித்தலைவர்முனைவர்வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தொடங்கி வைத்து, கலந்து கொண்டார்.
மேலும், “எனது வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். பின்னர், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் தலைமுறை வாக்காளர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும், தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றுவோம் என்ற உறுதிமொழியோடு கையெழுத்திட்டனர்.
மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி சாத்தூர் பேருந்து நிலையத்தில், இன்று வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, பணம் மற்றும் பரிசு பொருட்கள் பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.பின்னர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
0
Leave a Reply