நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் முதுகலை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (15.03.2024) நான் முதல்வன் திட்டம் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் முதுகலை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், 100 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வழிகாட்டி என்கிற வீதத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து, எடுத்துக்கூறி அத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் பெற்றோர்களின் வேலை வாய்ப்பின்மை, குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதாரத்தில் பின்;தங்கியவர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லாமல் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் கல்வியினை தொடர உதவி செய்யும் நோக்கில் விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளை இயங்கி வருகிறது.வரக்கூடிய கல்வி ஆண்டு முதல் இந்த அறக்கட்டளை மூலம் நிதியுதவி தேவைப்படும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை நடப்புக்கல்வியாண்டில் அதிகப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply