மக்களவை தேர்தல் - 2024 -ஐ முன்னிட்டு மாபெரும் ரங்கோலி திருவிழா
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம், திருவில்லிபுத்தூர் மடவார் வளாகம், செங்குன்றாபுரம், ஆமத்தூர் ஆகிய இடங்களில் மக்களவை பொதுத் தேர்தல்- 2024 முன்னிட்டு, வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் 10,000 கோலமிடும் “மாபெரும் ரங்கோலி திருவிழா” நிகழ்ச்சியில் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S,அவர்கள் பார்வையிட்டார்.மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களித்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு சதவீதத்தை அதிகரிக்க அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மக்களவை பொதுத் தேர்தல்- 2024 முன்னிட்டு, அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 750 இடங்களில் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களிப்போம் என்பதையும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதையும் வலியுறுத்தி சுமார் 1 இலட்சம் மகளிர்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் 10,000 கோலமிடும் மாபெரும் ரங்கோலி திருவிழா நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்றது.அதனடிப்படையில் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம், திருவில்லிபுத்தூர் மடவார் வளாகம், செங்குன்றாபுரம், ஆமத்தூர் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி எனது வாக்கு எனது எதிர்காலம், விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, ஒரு வாக்கின் வலிமை தேசத்தின் உரிமை, போடுவோம் ஓட்டு வாங்கமாட்டோம் நோட்டு என்று பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பல்வேறு விதமான வண்ணமயமான கோலங்கள் போடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். விருதுநகர் மாவட்டம் முழுவதும், அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 750 இடங்களில் விதவிதமாக வரைப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ணமயமான கோலங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த “மாபெரும் ரங்கோலி திருவிழா” மிகுந்த வரவேற்பை பெற்றது.
0
Leave a Reply