25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களவை தேர்தல் - 2024 -ஐ முன்னிட்டு மாபெரும் ரங்கோலி திருவிழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களவை தேர்தல் - 2024 -ஐ முன்னிட்டு மாபெரும் ரங்கோலி திருவிழா

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம், திருவில்லிபுத்தூர் மடவார் வளாகம், செங்குன்றாபுரம், ஆமத்தூர் ஆகிய இடங்களில் மக்களவை பொதுத் தேர்தல்- 2024 முன்னிட்டு, வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் 10,000 கோலமிடும் “மாபெரும் ரங்கோலி திருவிழா” நிகழ்ச்சியில் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்  I A S,அவர்கள் பார்வையிட்டார்.மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களித்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  தமிழ்நாடு முழுவதும்  பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்ற நாடளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு சதவீதத்தை அதிகரிக்க அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மக்களவை பொதுத் தேர்தல்- 2024 முன்னிட்டு, அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 750 இடங்களில் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களிப்போம் என்பதையும், என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதையும் வலியுறுத்தி சுமார் 1 இலட்சம் மகளிர்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் 10,000 கோலமிடும் மாபெரும் ரங்கோலி திருவிழா நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்றது.அதனடிப்படையில் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம், திருவில்லிபுத்தூர் மடவார் வளாகம், செங்குன்றாபுரம், ஆமத்தூர் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி எனது வாக்கு எனது எதிர்காலம், விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம், எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, ஒரு வாக்கின் வலிமை தேசத்தின் உரிமை, போடுவோம் ஓட்டு வாங்கமாட்டோம் நோட்டு என்று பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பல்வேறு விதமான வண்ணமயமான கோலங்கள் போடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். விருதுநகர் மாவட்டம் முழுவதும், அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 750 இடங்களில் விதவிதமாக வரைப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ணமயமான கோலங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த “மாபெரும் ரங்கோலி திருவிழா” மிகுந்த வரவேற்பை பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News