25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தீங்கு விளைவிக்க கூடிய கேன்சரை உண்டு செய்யும் நிறமி பஞ்சு மிட்டாய்  தடை செய்யப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தீங்கு விளைவிக்க கூடிய கேன்சரை உண்டு செய்யும் நிறமி பஞ்சு மிட்டாய்  தடை செய்யப்பட்டுள்ளது

பார்க்.. பீச்.. மால்.. தியேட்டர்.. பொருட்காட்சி.. கல்யாண வீடு என எங்கு பார்த்தாலும் தனித்து தெரியகூடிய ரோஸ் நிறத்தில் இருக்கும் பஞ்சு மிட்டாய் சுவையை ருசிக்காதவர்கள் யாரும் இல்லை.குறைந்த விலையில் குழந்தைகளை திருப்திபடுத்தவும் மகிழ்ச்சிபடுத்தவும் முடியும் என்றால் அது பஞ்சு மிட்டாய் தான். குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்து வந்த பஞ்சு மிட்டாய் தடைசெய்யப்பட்டுள்ளது. அதிக சர்க்கரை சேர்க்கப்படும் இவை உடலுக்கு தீங்கு என்பதை அறிந்தாலும் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று வாங்கி தரும் நிலையில் இவற்றில் வேதிப்பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 பஞ்சு மிட்டாய் சிறு ராட்டினம் போன்ற போன்ற கருவியில் சர்க்கரையில் நிறம் கலந்து மாவாக திரித்து பஞ்சு போல் நூலாய் பிரித்தெடுத்து பலூன் போல் பெரிதாக கொடுக்கும் லாவகமே அதை பார்ப்பவர்களுக்கு ருசிக்கும் ஆர்வத்தை தூண்டும்.பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் இருப்பதால் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சுமிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய் குறித்து அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ரோடமைன் பிபி என்னும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவுத்துறையில் பாதுகாப்பற்ற உணவு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 செயற்கை நிறம் கொடுக்கும் பொருள்கள் உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாலும் எந்த பொருள்களை பயன்படுத்தாலும் எவ்வளவு வரை பயன்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்துள்ளது. அப்படியான வழிகாட்டுதலில் இந்த ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால் இதை தடை செய்யப்பட்டுள்ளது.

இது சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களை தரக்கூடியது என்பதால் அதில் உள்ள உணவு பொருள்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் மில்க் பானங்கள், சிவப்பு முள்ளங்கி, இனிப்பு வள்ளிக்கிழங்கு, ஸ்வீட் வகைகளில் கூட தெரியாமல் கலக்கப்படுகிறது. அதனால் உணவு பொருள்களில் கலப்படம் இருப்பதை அறிந்து கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இவை தவிர தெரு உணவுகள், சிவப்பு சாஸ்கள், ரெயின்போ கேக்குகளில் கூட சேர்க்கப்படுகிறது என்பதால் ஒவ்வொன்றையும் வாங்கும் போது கவனம் செலுத்த வேண்டும்.ரோடமைன் பி நீண்ட கால நுகர்வு கல்லீரல் பாதிப்பு, கட்டிகள் மற்றும் புற்றுநோய் உண்டு செய்யும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

 உணவு பொருள்களில் இருந்தால் ஈரமான பஞ்சை நனைத்து உணவின் மீது வைக்கும் போது அதில் நிறம் படியகூடும். அதே போன்று சிறிது நீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து பார்த்தால் நிறம் தனியாக தெரியும். எண்ணெய் கொண்டு பஞ்சை தடவி எடுத்தாலும் அந்த நிறம் அதில் ஒட்டும். இவற்றில் நிறம் கலக்காமல் இருந்தால் அதில் நிறம் ஒட்டாது.பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி சேர்க்காமல் வெள்ளை நிறத்தில் தயாரித்து கொடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News