25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெள்ளரி  செடிகள்  வீட்டில் வளர்ப்பது எப்படி?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெள்ளரி செடிகள்  வீட்டில் வளர்ப்பது எப்படி?

வெள்ளரியின்பிறப்பிடம்இந்தியாஎன்றேகூறப்படுகிறது.வெள்ளரியைநம்வீட்டிலேயேஇயற்கையாகவளரவைக்கலாம்.மாடித்தோட்டகாய்கறிகளுள்வெள்ளையும்அடங்கும்.கோடைகாலத்தில்நாம்வெள்ளரியைவளர்ப்பதுஅவசியமாகக்கருதப்படுகிறது.வீட்டிலேயே எளிமையாக வெள்ளரிகள் வளர்க்கலாம். தொட்டி, சமையலறை, மொட்டை மாடி வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என வெள்ளரி செடிகளை வளர்த்த முடியும்.இவை இரண்டுவடிவங்களில்உள்ளன. ஒன்றுபுதர்மற்றொன்றுசெடிகள். வெள்ளரிசெடிகள்உட்புறத்திலும், கொள்கலன்களிலும் வளர்வதற்குபுதரில்வளரக்கூடியவைசிறந்தவழியாகஉள்ளது.

வெள்ளரி செடியை நடவு செய்வதற்கு முன்னரே, அதற்கான இடத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்..வெள்ளரிகளை நேரடியாக நடவு செய்வது, அதனை வளர்ப்பதற்கு சிறந்த வழியாக உள்ளது.இந்த செடிக்கு அதிக வெப்பம் மற்றும் வெளிச்சம் தேவை. எனவே, சூரிய ஒளி நிறைந்த இடத்தில் பானை/ கொள்கலனை வைத்துக் கொள்ளலாம்.மண்ணில் குறைந்தது1 அங்குல ஆழம் மற்றும்4 அங்குல இடைவெளியில், விதைகளை விதைக்க வேண்டும். இந்த விதைகள் முளைப்பதற்குத் தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.விதைகளை ஈரமான காகித துண்டில் ஊற வைக்கலாம் அல்லது24 மணி நேரம் விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்து, பின், அவற்றை மண்ணில் விதைக்கலாம்.

 வெள்ளரி செடிகளை வளர்ப்பதற்கு கரிம பாட்டிங் கலவை அல்லது விதை ஸ்டார்டர் கலவையைப் பயன்படுத்தலாம். வயது முதிர்ந்த உரத்தை, பானை மண்ணின் சம பாகங்களாகக் கலந்து கொள்ளவும்.காற்றுப் பைகளை அகற்றுவதற்கு, கொள்கலனில் உள்ள மண்ணை சிறிது அழுத்த வேண்டும். இதில் மண் முழுவதுமாக ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம்20 டிகிரி முதல் அதிகபட்சம்35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். அதே போல, மண்ணின்pH அளவானது5.5 முதல்6.8 வரை இருக்க வேண்டும்.விதைகளை விதைப்பதற்கு முன்பாக, வயதான உரம் சேர்த்து நட வேண்டும். இருப்பினும், அதிக அளவு பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு நைட்ரஜன் கொண்ட உரம், வெள்ளரி பழங்களை சிறப்பாக வளர்க்க உதவுகிறது.

பூச்சிகள் இளம் வயதிலேயே, அதன் நாற்றுகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அமையும். மேலும், வெள்ளரி செடிகள் அசுவினி, வெள்ளரி வண்டு, பூசணி பூச்சி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. இதனை சோதனை அட்டவணையை பராமரிப்பதன் மூலமும், கரிம வேம்பு தெளிப்பதன் மூலமாகவும் இந்த பூச்சி தாக்குதலைத் தவிர்க்க முடியும்.வெள்ளரிக்காய்கள், அதன் உள்ளடக்கத்தில்95% நீரைக் கொண்டுள்ளதால், இது நன்கு வளர ஈரமான திடப் பொருள் தேவைப்படுகின்றன.இவ்வாறு முறையாகப் பராமரித்து வந்தால்,55 முதல்60 நாள்களிலேயே முளைத்த வெள்ளரிக்காய்களை அறுவடை செய்ய முடியும். காய், மஞ்சள் நிறமாக மாற விடாமல், முன்னரே அறுவடை செய்ய வேண்டும். நன்கு ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ஆனது பச்சை நிறம் மற்றும் உறுதியான வடிவத்தில் காணப்படும். இதனை ஒரு வாரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் புதிது போல் இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News