ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, குரோஷியாவின் டோடிக் ஜோடி வெற்றி.
சீனாவில், ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன், போபண்ணா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, ஸ்பெயினின் பாப்லோ பஸ்டா, பெட்ரோ மாட்டினஸ் ஜோடியை எதிர்கொண்டது.63 நிமிடங்கள் நீடித்த தொடக்க சுற்று ஆட்டத்தில் ஐந்தாம் நிலை இந்திய-குரோஷிய ஜோடி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய இந்திய -குரோஷிய ஜோடி,இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
0
Leave a Reply