25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் திடீர் உயர்வு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் திடீர் உயர்வு.

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 14% வரை உயர்ந்து மும்பை பங்குச்சந்தையில் 288.75 ரூபாய் வரையில் உயர்ந்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் இருந்து அதன் நிதியியல் பிரிவைத் தனியாகப் பிரித்ததிலிருந்து முதலீட்டாளர்கள் பெரும் லாபத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இன்று இதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் தான் ஜியோ ஃபைனான்சியல் தனது வர்த்தக மாடலை மாற்றியதன் மூலம் பங்குச்சந்தையில் மந்த நிலையை எதிர்கொண்டது. இந்த நிலையில் இன்று பதிவான திடீர் உயர்வுக்கு என்ன காரணம்.பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ், தனது வேலெட் வர்த்தகத்தை விற்பனை செய்ய முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் NBFC மற்றும் தனியார் துறை முன்னணி வங்கியான HDFC வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது.
ஒரு மூத்த ஃபின்டெக் மற்றும் வங்கித் துறையின் நிர்வாகி ஒருவர் பிசினஸ் லைன் பத்திரியிடம், Paytm Payments பேங்க்-ன் கீழ் இயங்கும் Paytm வேலெட் வர்த்தகத்தை HDFC வங்கி மற்றும்ஜியோஃபைனான்சியல் ஆகியவற்றுக்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேடிஎம்-ன் விஜய் சேகர் ஷர்மாவின் டீம் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தனது வர்த்தகத்தை விற்பதற்காக ஜியோ பைனான்சியல் சேவை நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், RBI தடைக்கு முன்னதாக HDFC வங்கியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியதாகத் தெரிகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி மாலை முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் (ஜேஎஃப்எஸ்எல்), Paytm வேலெட் வர்த்தகத்தை பெறுவதற்கு One 97 Communications நிறுவனத்துடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
பேடிஎம் நிறுவனத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து பிரச்சனைக்கும் துவக்கப் புள்ளியாக இருந்தது, நிதியியல் தளங்கள் மற்றும் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு மத்தியில் முறைகேடாக, சந்தேகத்திற்கு இடமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை விதிமுறைக்கு மீறி நிதி பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதை ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது. இதேபோல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி KYC விதிகளைப் பூர்த்திச் செய்யாத பல லட்சம் கணக்குகளில் இருந்து பேமெண்ட்களைப் பிராசஸ் செய்துள்ளது. இதோடு ஓரே பான் கார்டு வைத்து பல கணக்குகள் திறக்க பயன்படுத்தப்பட்ட1000த்திற்கும் அதிகமான வழக்குகள் உள்ளதையும் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News