25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சிவபெருமானுக்கு பிடித்தமான   வில்வ இலை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவபெருமானுக்கு பிடித்தமான   வில்வ இலை

அகில உலகத்தை காத்து ரட்சிக்கும் தெய்வமாக திகழ்பவர் சிவபெருமானே. சிவபெருமானுக்கு பிடித்தமான பொருளாக கருதப்படுகிறது வில்வ இலை. பல வகையான வாசனை மிகுந்த மலர்களை படைப்பதை விட வில்வ இலையை நாம் சிவபெருமானுக்கு படைப்பதால் அவர் பல மடங்கு சந்தோஷம் அடைவார் என்று கூறப்படுகிறது.

 அப்படிப்பட்ட இந்த வில்வ இலையை நாம் மூன்று இலைகள் கொண்ட காம்பு இருப்பது போல் படைக்க வேண்டும். வில்வ இலை வாடினாலும் அதன் மகத்துவம் குறையாது என்பதால் ஒருமுறை படைத்த அதே வில்வ இலையை மறுநாளும் நாம் படைக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. படைப்பதற்கு முன்பாக அந்த இலையை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு படைக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும்.

சிவபெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தேன். சுத்தமான தேனை சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைப்பதன் மூலம் நம்முடைய மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் நீங்கி தூய மனம் பெறுவோம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் ஏற்படும். இந்த தேனை பூஜை முடிந்த பிறகு அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News