இராஜபாளையத்தில் குவி லென்ஸ்கள் அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
இராஜபாளையம் நகர் பகுதி வழியே கேரள மாநிலத்துக்கு செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நாளுக்கு பல்லாயிரக்கணக்கான நாள் பெருகிவரும் வாகனங்களால் வாகனங்கள் இந்த ஒரே ரோட்டினை பயன்படுத்தும் சூழல் ஏற்படுகிறது. நீண்டகாலமான மாற்று வழியாக இருந்து வந்த டி.பி.மில்ஸ் ரோடும் ரயில்வே மேம்பால இணைப்பு சாலை செயல்பாட்டுக்கு வராததால் முடங்கியுள்ளது. நகராட்சி மக்களுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஒன்றே உபயோகிக்கும் ரோடாக இருந்து வருவதும், ஏற்கனவே இதை குண்டும் குழியுமாக செப்பனிடாமல் இருப்பதும் வகன ஓட்டிகளை தொடர் விபத்துக்கு ஆளாகி வருகின்றன.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை பிரதான வளைவுகளில் வைக்கப்பட்டிருந்த குவி லென்ஸ்கள், மிளிரும் விளக்குகள், விழிப்புணர்வு பதாகைகள் விபத்து தடுப்புகளில் நல்ல பலனை அளித்து வந்தன். நாளடைவில் பராமரிப்பற்று அவை செயல்பாடு இன்றி போயின. ஏனவே மக்கள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி நெரிசல் மிகுந்த பஞ்சு மார்க்கெட், காந்திகலைமன்றம், சங்கரன்கோவில் முக்கு, டிபி.மில்ஸ் ரோடு, ஹாஸ்பிடல் ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட இடங்களில் குவி லென்ஸ்கள், விழிப்புணர்வு பதாகைகள் வைப்பதற்கு போக்குவரத்து அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply