பழைய பஸ்ஸ்டாண்ட் பணியை துவங்க
ராஜபாளையம் நகராட்சி ஒரு லட்சத்திற்திகும் மேல் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளது.. ஏற்கனவே நகர் பகுதி நடுவே இயங்கி வந்த பழைய பஸ் ஸ்டாண்ட், நெருக்கடி காரணம் காட்டி 2006 ல் சங்கரன் கோவில் ரோட்டில் ஒருங்கிணைந்த புது பஸ் ஸ்டாண்ட் துவங்கப்பட்டது.
பொதுமக்கள், வியாபாரிகள் நலன் என்று கூறி பல்வேறு அரசியல் காரணங்களினால் முழுமையாக இயங்குவது தடை ஏற்பட்டது.. இதனால் பழைய பஸ் ஸ்டாண்டில் டவுண் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது -
2018ல் தொடங்கி தற்போது வரை முடிவடையாத ரயில்வே மேம்பால பணிகளால் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த தென்காசி மெயின்ரோடு, ஒரு வழி பாதை மாற்று வழியான டி.பி.மில்ஸ். ரோடு முடக்கத்தால் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாகி வருகின்றன. தற்போது அறிவிப்பால் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டிய டவுன் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டுடன் திரும்புவதை விட்டு , புது பஸ்டாண்ட் வரை செல்வதால் , பி.ஏ.சி.ஆர் சிலை, காந்தி கலைமன்றம் , தென்காசி மெயின் ரோடு வழியே , சங்கரன் கோவில் முக்கு பகுதியில் மொத்தமாக நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.. பிரச்னைகளுக்கு தீர்வாக, புது பஸ் ஸ்டாண்டிலிருந்து தென்காசி ரோடுக்கான இணைப்பு ரோடு பணியை , முடித்த பின்பும், சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் முடிவடைந்த பின்பும் ,பழைய பஸ்ஸ்டாண்ட் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply