பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024
ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு ,ஐந்து நிறத்தினால் ஆன ஒலிம்பிக் வளையங்கள் ,இது ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா, என உலகின் ஐந்து முக்கிய கண்டங்களை குறிக்கும். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 3வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது.( 1900, 1924, ,2024. ),நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி துவக்க விழா மைதானத்தில் நடப்பது வழக்கம் சற்று வித்தியாசமாக இம்முறை பாரிசின் சென் நதியில் துவக்க விழா நடக்க உள்ளது. ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கும் 100 படகுகளில் 6 கிலோ மீட்டர் தூரம், 205 நாடுகளை சேர்ந்த 10., 500 வீரர்கள், வீராங்கனைகள் செல்ல உள்ளனர்.
நதியின் இருபுறமும் அமர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் துவக்க விழாவை காண உள்ளனர். பாப் பாடகர்களான செலின் டியான், லேடி ககா பாட உள்ளனர். பின் நடக்கும் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை சிந்து, சரம் கமல் ஏந்தி வர உள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்காக பாரிசில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. துவக்கவிழா நடக்கும் சென்நதிகரையில் 45,000 போலீசார், பாரா ராணுவத்தினர், 10,000 சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் இந்தியா உட்பட 31 பல் வேறு நாடுகளில் இருந்து 1800 சிறப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை நேரில் காண ஒரு கோடி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply