25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024

ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு ,ஐந்து நிறத்தினால் ஆன ஒலிம்பிக் வளையங்கள் ,இது ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா, என உலகின் ஐந்து முக்கிய கண்டங்களை குறிக்கும். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 3வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது.( 1900, 1924, ,2024. ),நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி துவக்க விழா மைதானத்தில் நடப்பது வழக்கம் சற்று வித்தியாசமாக இம்முறை பாரிசின் சென் நதியில் துவக்க விழா நடக்க உள்ளது. ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கும் 100 படகுகளில் 6 கிலோ மீட்டர் தூரம், 205 நாடுகளை சேர்ந்த 10., 500 வீரர்கள், வீராங்கனைகள் செல்ல உள்ளனர். 

நதியின் இருபுறமும் அமர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் துவக்க விழாவை காண உள்ளனர். பாப் பாடகர்களான செலின் டியான், லேடி ககா பாட உள்ளனர். பின் நடக்கும் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை சிந்து, சரம் கமல் ஏந்தி வர உள்ளனர்.

 ஒலிம்பிக் போட்டிக்காக பாரிசில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. துவக்கவிழா நடக்கும் சென்நதிகரையில் 45,000 போலீசார், பாரா ராணுவத்தினர், 10,000 சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில் இந்தியா உட்பட 31 பல் வேறு நாடுகளில் இருந்து 1800 சிறப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். 

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை நேரில் காண ஒரு கோடி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 97 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News