சிறுநீரக நலனுக்கு முள்ளங்கிகீரை ஜூஸ்
சிறுநீரகங்களில் ஏற்படும் அத்தனை தொந்தரவுகளுக்கும் ஒரே தீர்வாகவும்,மருந்தாகவும் நமக்கு கிடைத்திருப்பது முள்ளங்கி கீரை எனலாம். இந்த ஒரு கீரையே போதும். ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்த்துவிடும்.முள்ளங்கி கிழங்கை பொறுத்தவரை முள்ளங்கியில் இருப்பதைவிட6 மடங்கு, வைட்டமின்C, முள்ளங்கி கீரையில் ஒளிந்திருக்கின்றன.உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைப்பதுடன்,நோய்களை நெருங்க விடாமல் இந்த இலைகள் தடுக்கின்றன. இதனால், கல்லீரல்,சிறுநீரகம், நுரையீரல் இதயம்,கண்கள் என அனைத்து உறுப்புகளுமே திறன்பட செயலாற்ற தூண்டுகோலாகிறது.
குளிர்ச்சி நிறைந்த இந்த முள்ளங்கி இலைகள் மூலநோய்களுக்கு அருமருந்தாகின்றன. முள்ளங்கி இலைகள் வீக்கத்தைக் குறைக்கின்றன.முள்ளங்கி கீரையின் சாற்றில்,வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மாலை2 வேளையும் சாப்பிட்டு வந்தால்,சர்க்கரை நோய் குணமாகும்.கீரையின் சாற்றினை6 ஸ்பூன் குடித்து வந்தாலே,சிறுநீரகத்திலுள்ள கற்கள் வெளியேறிவிடும்..உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகளையும் கரைப்பதால், எடை குறைபவர்களுக்கு இந்த கீரையை சாப்பிட வேண்டும்.
சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள்,மற்ற கீரைகளை சாப்பிட முடியாவிட்டாலும், இந்த முள்ளங்கிக் கீரையையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும். சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டாலே நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.சிறுநீர் கல்லடைப்புகளுக்கும் இந்த கீரை நல்லது... ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து3 நாட்கள் காலை, மாலை சாப்பிட்டு வந்தாலே நீர் அடைப்பு தொல்லை நீங்கிவிடும்.
0
Leave a Reply