25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சிறுநீரக நலனுக்கு முள்ளங்கிகீரை ஜூஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுநீரக நலனுக்கு முள்ளங்கிகீரை ஜூஸ்

சிறுநீரகங்களில் ஏற்படும் அத்தனை தொந்தரவுகளுக்கும் ஒரே தீர்வாகவும்,மருந்தாகவும் நமக்கு கிடைத்திருப்பது முள்ளங்கி கீரை எனலாம். இந்த ஒரு கீரையே போதும். ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்த்துவிடும்.முள்ளங்கி கிழங்கை பொறுத்தவரை முள்ளங்கியில் இருப்பதைவிட‌6 மடங்கு, வைட்டமின்C, முள்ளங்கி கீரையில் ஒளிந்திருக்கின்றன.உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைப்பதுடன்,நோய்களை நெருங்க விடாமல் இந்த இலைகள் தடுக்கின்றன. இதனால், கல்லீரல்,சிறுநீரகம், நுரையீரல் இதயம்,கண்கள் என அனைத்து உறுப்புகளுமே திறன்பட செயலாற்ற தூண்டுகோலாகிறது.

குளிர்ச்சி நிறைந்த இந்த முள்ளங்கி இலைகள் மூலநோய்களுக்கு அருமருந்தாகின்றன. முள்ளங்கி இலைகள் வீக்கத்தைக் குறைக்கின்றன.முள்ளங்கி கீரையின் சாற்றில்,வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மாலை2 வேளையும் சாப்பிட்டு வந்தால்,சர்க்கரை நோய் குணமாகும்.கீரையின் சாற்றினை6 ஸ்பூன் குடித்து வந்தாலே,சிறுநீரகத்திலுள்ள கற்கள் வெளியேறிவிடும்..உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகளையும் கரைப்பதால், எடை குறைபவர்களுக்கு இந்த கீரையை சாப்பிட வேண்டும்.

சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள்,மற்ற கீரைகளை சாப்பிட முடியாவிட்டாலும், இந்த முள்ளங்கிக் கீரையையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும். சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டாலே நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.சிறுநீர் கல்லடைப்புகளுக்கும் இந்த கீரை நல்லது... ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து3 நாட்கள் காலை, மாலை சாப்பிட்டு வந்தாலே நீர் அடைப்பு தொல்லை நீங்கிவிடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News