இராஜபாளையம் முதல் பிளாட்பாரத்திற்கு ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை மாற்றி பயனாளர்கள் அணுக வசதி செய்யக் கோரிக்கை.
முதலாம், இரண்டாம் பிளாட்பார்மில் இருந்து தான் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளான திருட்டு, பொருட்கள் ஆட்களை தவற விடுதல். விபத்துக்கள் குறித்து ரயில்வே போலீசாரிடம் முறையிட வேண்டும். மூன்றாவது பிளாட்பார்மில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பதால், நடைமுறை சிக்கலால் புகார்கள் விடுபடுகின்றன. போலீசாரும் ஒவ்வொரு முறையும் நடைமேடை ஏறி இறங்கி ஸ்டேஷன்களுக்கு செல்வதில் சிரமம் உள்ளதால் மாற்ற, வழி காணவேண்டும்.தற்போது அம்ரித் பாரத் திட்டத்தில் ஸ்டேஷன் மேம்பாட்டிற்கான கட்டட பணிகள் துவங்க உள்ள நிலையில் பயணியர் சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் முதலாவது பிளாட்பார்மில் மாற்றி அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply