25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள 9243 அலுவலர்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள 9243 அலுவலர்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, விருதுநகர், சாத்தூர், திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (07.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மக்களவை பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7 தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவு நடைமுறைகள் குறித்து இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.வாக்குச் சாவடி தலைமை அலுவலர், வாக்குச் சாவடி அலுவலர்கள் 1, 2, 3 என வாக்குசாவடிகளில் வாக்கு பதிவு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்ற இருக்கும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப் பதிவு பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

இதில் 202-இராஜபாளையம் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற பி.ஏ. சின்னையா ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் 1281 அலுவலர்களுக்கும், 203-திருவில்லிபுத்தூர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற கலசலிங்கம் பல்கலை க்கழகத்தில் 1391 அலுவலர்களுக்கும், 204-சாத்தூர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் 1380 அலுவலர்களுக்கும், 205- சிவகாசி தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற எஸ்.எச்.என்.வி. மேல்நிலைப் பள்ளியில் 1350 அலுவலர்களுக்கும், 206-விருதுநகர் தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1262 அலுவலர்களுக்கும் , 207-அருப்புக்கோட்டை தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற தேவாங்கர் கலைக்கல்லூரியில் 1243 அலுவலர்களுக்கும், 208- திருச்சுழி தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்ற சேது தொழில் நுட்ப பயிலகத்தில் 1336 அலுவலர்களுக்கும் என மொத்தம் 9243 அலுவலர்களுக்கு பயிற்சிகள் நடைபெற்றன.

இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சிகளில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News