பிரான்ஸ் பாரிசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஆண்கள் ஹாக்கியில் அசத்திய இந்திய அணி வீரர் ஸ்ரீஜேஷிற்கு அரசு ரூ.2 கோடி பரிசுத்தொகை
பிரான்சில் பாரிசல் 33-வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஆண்கள் ஹாக்கியில் அசத்திய இந்திய அணி 1972-க்குப் பின்அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் 2021, 2014 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இதற்கு கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் முக்கிய காரணமாக இருந்தார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என முன்னணி அணிகளை சாய்க்க கைகொடுத்தார். இத்தொடர் முழுவதும் ஜொலித்த இவர் 8 போட்டியில் எதிரணிகள் 12 கோல் மட்டும் அடிக்க விட்டார். ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஒய்வு பெற்ற ஸ்ரீஜேஷ், இந்திய ஜீனியர் அணி பயிற்சியாளராக செயல்பட காத்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவருக்கு அம்மாநில அரசு ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
0
Leave a Reply