வெப்பக்காற்று தாக்கத்தால் பொது மக்கள் பாதிப்படையாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
கோடை காலம் ஆரம்பித்துள்ளதால், விருதுநகர் மாவட்டத்தில் வெப்பக்காற்று தாக்கத்தால் பொது மக்கள் பாதிப்படையாமல் இருக்கும் பொருட்டு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்கள்.
வெப்பக்காற்று என்பது 3 டிகிரி செல்சியஸ் சாதாரண வெப்ப நிலைக்கு மேல் 3 நாட்களோ அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் இருந்தால் அது வெப்ப நிலையிலிருந்து 50 டிகிரி செல்சியஸ்க்கு மேல் ஐந்து நாட்களோ அல்லது அதற்குமேற்பட்ட நாட்கள் இருந்தாலோ அல்லது எந்த பகுதியிலுள்ள உயர் தட்ப வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் இரண்டு நாளுக்கு மேல் இருந்தாலோ அல்லது வெப்பக்காற்றாகும்.
பருவமழைக்கு முன்னர் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் மாதங்கள் வெப்ப காற்று காலமாகும்.
வெப்பக்காற்று காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை:-
• உள்ளூர் தட்பவெப்ப அறிவிப்புகளை தொலைக்காட்சிகளில் பார்த்தும், வானொலியில் கேட்டும், நாளிதழ்களில் படித்தும் தெரிந்து கொள்ளுதல்.
• தாகமின்றி இருந்தாலும் தேவையான அளவு குடிநீர் அருந்துதல்.
• லேசான இளம்வண்ண தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், சூரிய ஒளியில் வெளியில் செல்லும் பொழுது பாதுகாப்பிற்கான கண்ணாடி, குடை, தொப்பி, காலணிகள் அணிதல்.
• வெளியில் பணிபுரியும் பொழுது தொப்பி, குடை, துணி ஆகியவற்றை தலை, கழுத்து, முகம் மற்றும் கை கால்களில் பயன்படுத்துதல்.
• உடலில் ஏற்படும் நீரிழப்பை தவிர்க்கும் பொருட்டு உப்பு சர்க்கரை கரைசல் வீட்டில் தயாரிக்கும் நீராகாரங்களான லஸ்ஸி, கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு, மோர் போன்றவற்றை பயன்படுத்துதல்.
• வெப்பக்காற்று தாக்குதல் அறிகுறிகளான வெப்பக் கொப்பளங்கள் தோன்றுதல் உஷ்ண பாதிப்புகளான உடல் தளர்ச்சி, தலைசுற்றல், தலைவலி, குமட்டல், வியர்த்தல், வலிப்பு குறித்து தெரிந்து இருத்தல். உடல்நலக்குறை நினைவின்மை ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவரை அணுகவும்.
• கால்நடைகளை நிழலில் வைத்து பராமரித்தல், அதிக அளவு குடிநீர் கொடுத்தல்.
• வீட்டிலுள்ள திரை சீலை, நிழற்தட்டி மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து வீட்டை குளிருடன் வைத்திருத்தல்.
• பணிபுரியும் இடங்களில் குளிர்ந்த குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தல்.
• சூரியஒளி நேரடியாக படுமாறு தொழிலாளர்கள் பணிபுரிதல் தடுத்தல்.
• பகலில் குளிரான நேரங்களில் கடினமான உடலுழைப்பை மேற்கொள்ள திட்டமிடுதல்.
• வெளிப்பணிகளின் போது ஒய்வு நேர அளவை அதிகரித்தல்.
• கர்ப்பிணி பணியாளர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் பணியாளர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துதல்.
வெப்பக் காற்று காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க கூடாதவை:
• நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் விட்டு செல்லுதல் கூடாது.
• நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சூரியஒளி உடலில் படாதவாறு பார்த்துக் கொள்ளுதல்.
• கருப்புநிற, கடினமான, இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்கவும்.
• நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளி வேலை பார்ப்பது மற்றும் அதிக உஷ்ணநிலை இருக்கும்பொழுது கடினமான உடலுழைப்பை மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
• சமயலறை கதவு, ஜன்னல்கள் திறந்த நிலையில் காற்றோட்டமாக இருக்க செய்வதுடன், அதிக உஷ்ணமான நேரங்களில் சமையல் செய்வதும் தவிர்க்க வேண்டும்.
• மதுபானங்கள், டீ, காபி மற்றும் காற்றடைக்கப்பட்ட பானங்கள் ஆகியவை உடலில் நீர் இழப்பு ஏற்பட செய்யக் கூடியவை. எனவே அருந்துவதை தவிர்க்கவும்.
• அதிக புரதமுள்ள உணவு மற்றும் பழையக் கெட்டுப்போன உணவுகளை உண்பதை தவிர்க்கவும்.
மேலும், இது தொடர்பான விவரங்கள் மாவட்ட அவசர செயல்பாட்டு மையம், தொலைபேசி எண்-1077 (04562-252017)-ல் தொடர்பு கொள்ளவும். கோடை கால வெயில் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் பொருட்டு தரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், குடிநீர் வாரியத்திற்கும், நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான மருந்து பொருட்கள் இருப்பில் வைத்துக் கொள்ளுமாறும், தேவையான சிகிச்சை அளிக்குமாறும், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மருத்துவக்கல்லூரி மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
0
Leave a Reply