பொரித்த மீதி அப்பளம் சுவை மாறாமல் இருக்க
சாம்பார் நல்ல கலரா வர ,நல்ல பழுத்த தக்காளி பழம்2எடுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பின்பு சாம்பார் தாளிக்கும் போது தக்காளி விழுதையும் சேர்த்து தாளித்து, சாம்பார் வைத்து பாருங்கள் சுவையும் ,கலரும் அருமையாக இருக்கும்.
குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பஞ்சு போல பருப்பு வெந்து வரும்.
பொரியல் அடி பிடிக்கும் போது உடனே கரண்டி வைத்து கிளராமல் உடனே 2 ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து கொடுத்தால் அடி பிடித்தது உடனே சரியாகும்.
பொரியல் வகைகள் மீதம் ஆகி விட்டால் அதில் ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் போட்டு பாருங்கள் ருசி அருமையாக இருக்கும்.
காரக்குழம்பு, புளி குழம்பு வகைகள் செய்யும்,போது காரம் கொஞ்சம் அதிகமானால், அதுக்கு வெல்லம் சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் காரம் குறைந்து, ருசியும் கூடும்.
பொரித்த அப்பளம் மீதி ஆகி விட்டால் ஒரு டைட்டான டப்பாவில் போட்டுfridge ல் வைத்து விட்டால் சுவை மாறாமல் அப்படியே இருக்கும்.
0
Leave a Reply