மசால் வடை ருசி பிரமாதமாக இருக்க
வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது கடைசியில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு விடுங்கள். நெய் நல்ல மணமாகவும் இருக்கும்.. கசக்கவும் செய்யாது.
டீ போடும்போது, முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையை சேர்த்துக் கொதிக்க விடுங்கள். பின்னர் டீத்தூள் போட்டு வடிகட்டி சூடான பால் சேர்த்தால், டீ திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு பாத்திரமும் கருக்காது.
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது முதலில் சிறிது கடலை மாவை எண்ணெயில் வறுத்துவிட்டு, கிழங்கைப் போட்டால் ரோஸ்ட் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
சாம்பார், வற்றல் குழம்பு ஆகியவற்றில் காரம் அதிகமாகி விட்டால், நல்லெண்ணெய்யை ஊற்றி கொஞ்சம் கொதிக்க விடுங்கள் காரம் குறைந்துவிடும்.
மசால் வடை செய்யும்போது மாவு நீர்த்து போய்விட்டால் இரண்டு பிரெட் துண்டுகளை மிக்சியில் பொடித்து, மாவுடன் சேர்த்து வடை தட்டினால் வடை ருசி பிரமாதமாக இருக்கும்.
0
Leave a Reply